மேலும் அறிய

சமூக செயற்பாட்டாளர்களுக்கு அர்ஜீன் சம்பத் கொலை மிரட்டல்? - SDPI கட்சி கண்டனம்

தமிழகத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டும் - SDPI

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வெளியுறவுத்துறை விரிசல் விவகாரம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் அங்கு நடத்தப்பட்டு வரும் அரசியல் கொலைகளைப் போன்று , பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் எழும் குரல்களை அது போன்ற கொலை நடவடிக்கைகள் மூலம் அடக்க வேண்டும் என்றும் , குறிப்பாக பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் , மாணவர்கள் மீது கொலை தாக்குதல் நடத்த வேண்டும் என்கிற ரீதியில் , அதற்காக ஸ்கெட்ச் போட்டு தரப்படும் என்றும் , இதற்கு உதவ வேண்டும் என்கிற ரீதியில் , பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்  வெளிப்படையாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கோவை கலவர வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டவர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து நச்சுக் கருத்துக்களை விதைத்து வருபவர் , வன்முறையை தூண்டி வருபவர், தொலைக்காட்சி விவாதங்களில் கூட எதிர் கருத்துக்கள் பேசுவோரை பகிரங்கமாக மிரட்டியவர் என பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் அர்ஜுன் சம்பத். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இப்படிப்பட்ட வன்முறை எண்ணம்  கொண்டவரை தான் பழனியில் நடைபெற்ற தமிழக அரசின் விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அமைச்சர் சேகர்பாபு அவர் அருகில் அமர்ந்திருந்தார். வன்முறை வெறுப்பு சிந்தனை கொண்ட ஒருவருக்கு அரசு அளிக்கும் மரியாதையே, தங்களை காவல்துறையோ, அரசோ எதுவும் செய்யாது என்கிற தைரியத்தை அளித்து அவரை இதுபோன்று பகிரங்கமாக கொலை மிரட்டல் கொடுக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்காகும்.

ஆகவே, தமிழக நலனுக்காக  போராடக் கூடியவர்களை, குரல் கொடுக்கக் கூடியவர்களை பயங்கரவாதிகளாக பாவித்து, அவர்களை கொலை செய்திட ஸ்கெட்ச் போட்டு தரப்படும் என்று பகிரங்கமாக கொலை திட்டத்தை பதிவிட்டுள்ள அர்ஜுன் சம்பத் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். எந்த ஒரு  நிகழ்வையும் மதவாத கண்ணோட்டத்தோடு அணுகும், தமிழகத்தின் அமைதியான சூழலை சீர்குலைக்க முயலும் அர்ஜுன் சம்பத் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

அப்பாவி சிறுபான்மை முஸ்லிம் இளைஞர்களை முகநூல் பதிவுக்காக கூட யுஏபிஏ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து என்ஐஏ-விடம் ஒப்படைக்கும் தமிழக காவல்துறை, இதுபோன்ற பகிரங்கமாக வன்முறையை தூண்டும், கொலை மிரட்டல் விடுக்கும் அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது, அவர்கள் தொடர்ந்து அந்த குற்றத்தை செய்ய கூடுதல் உற்சாகத்தை அளிக்கின்றது.

பன்சாரா, கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் போன்ற சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் சங்பரிவாரத்தைச் சேர்ந்த மர்ம கும்பல்களால் கொலை செய்யப்பட்டது போன்று, தமிழகத்திலும் அது போன்றதொரு நிகழ்வை நடத்த வேண்டும் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ள  அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு  தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget