மேலும் அறிய

Sasikala Controversial Speech : ’எதார்த்தமா கேட்பாரு...எதார்த்தமா சொல்லுவேன்!’ -எம்.ஜி.ஆர்., விவகாரத்தில் சசிகலா பல்டி!

அந்த வயதில் நாம எல்லோரும் எதார்த்தமா இருப்போம், யார் சார்பும் இல்லாம எதார்த்தமா பேசுவோம். எதார்த்தமா பேசுற சின்னவங்கக்கிட்ட தலைவர் (எம்.ஜி.ஆர்) எப்போதுமே ஆலோசனை கேட்பார்.

அண்மையில் மதுரையைச் சேர்ந்த தனது ஆதரவாளர் ஒருவருடன் சசிகலா பேசிய  ஆடியோ  உரையாடல் வைரலானது. அதில் தான் எம்.ஜி.ஆர்.க்கு அரசியல் தொடர்பாக ஆலோசனை வழங்கியதாக சசிகலா பேசியிருந்தார் அவர்.  எம்.ஜி.ஆருக்கே அரசியல் அட்வைஸ் செய்தாரா சசிகலா எனப் புருவம் உயர்த்தினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 

அவர் பேசியதிலிருந்து, ‘தலைவர் கூடயும் நான் நிறைய பயணிச்சிருக்கேன்.அது வெளிய தெரியாது.அவரும் சில ஆலோசனை கேட்பாரு.. தன்மையா சொல்லியிருக்கேன். அதே தன்மைதான் அம்மா கோபப்பட்டு முடிவுகள் எடுக்கும்போதும் இருந்தது. தொண்டர்களுக்காக நீங்க அரசியல்ல இருக்கனும்னு அருகில் உட்கார்ந்து அமைதியா சொல்லுவேன்’ எனப் பேசியிருந்தார். 

சசிகலா சொன்னது உண்மையா? அது குறித்த விளக்கத்தை அவர் தனது அடுத்த ஆடியோவில் வெளியிட்டுருக்கிறார். சிவகங்கையைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவருடன் பேசிய அந்த உரையாடலில்,’அந்த வயதில் நாம எல்லோரும் எதார்த்தமா இருப்போம், யார் சார்பும் இல்லாம எதார்த்தமா பேசுவோம். எதார்த்தமா பேசுற சின்னவங்கக்கிட்ட தலைவர் (எம்.ஜி.ஆர்) எப்போதுமே ஆலோசனை கேட்பார்.அப்படித்தான் என்னிடமும் கேட்பார். அதைதான் நான் சொன்னேன்’ என விளக்கமளித்துள்ளார். 



Sasikala  Controversial Speech : ’எதார்த்தமா கேட்பாரு...எதார்த்தமா சொல்லுவேன்!’ -எம்.ஜி.ஆர்., விவகாரத்தில் சசிகலா பல்டி!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதையடுத்து, சமீபகாலமாக சசிகலா தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு சசிகலா  ஈரோட்டைச் சேர்ந்த சிதம்பரம் என்ற தனது ஆதரவாளரிடம் தொலைபேசியில் பேசியிருந்தார்.

அதில்,“கொரோனா தாக்கம் முழுமையாக ஓயட்டும். கட்டாயம் நான் வந்துடுவேன். கட்சியே இப்போ வேற மாதிரி போயிகிட்டு இருக்கு. விரைவில் வந்த இந்த கட்சியை காப்பாற்றுவேன். அம்மா இருக்கும்போது நம்ம கட்சி நாட்டிலேயே 3-வது பெரிய கட்சினு நமக்கு அந்தஸ்து கிடைச்சது. ஆனா இன்னைக்கு நம்ம எம்.பி.க்களை நாமே இழந்திருக்கிறோம். இருந்த எம்.பி.க்களையும் அவங்களோட தவறான முடிவுகளால் வேற கட்சிகளுக்கு தாரை வார்த்திருக்கிறோம். எந்த பிரச்சினையும் ஏற்படாம என்னோட தலைமையில் இருந்திருந்தால் ஆட்சியை நிச்சயம் அமைத்திருக்கலாம்” என்று பேசியுள்ளார். மேலும், சேலம் ஆத்தூரைச் சேர்ந்த தனது ஆதரவாளர் சுந்தரம் என்பவரிடம் சசிகலா பேசும்போது,” சேலத்தில் கட்சியினர் தன்னிச்சையான போக்கில் செயல்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் கவலைப்படாமல் இருங்கள். நான் வந்து எல்லாத்தையும் சரி பண்ணிட்றேன்.” இவ்வாறு அவர் பேசியிருந்தார். 

நேற்று பேசிய பேச்சு பல்வேறு தரப்பில் எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தான், இன்று வேறொருவருடன் பேசிய சசிகலா, அதற்கு பதிலளிக்கும் விதமாக உரையாடியிருந்தார். நேற்று அவர் கூறியிருந்த டோனிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எதார்த்தமான பேச்சு என்பதைப் போல இன்று பேசியிருக்கிறார் சசிகலா. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget