மேலும் அறிய

Rahul Gandhi: ”நீங்க என்னயா மறுக்கிறது” மோடி பிரதமரே ஆகிருக்கமாட்டாரு - ஆதாரம் இருக்குன்னு அடித்து பேசும் ராகுல்

Rahul Gandhi: இந்தியாவில் தேர்தல் நடைமுறை ஏற்கனவே இறந்துவிட்டதாக, தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி மீண்டும் குற்றமாட்டியுள்ளார்.

Rahul Gandhi: இந்தியாவில் கடந்த ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மோசடி நடைபெறாவிட்டால், மோடிக்கு பிரதமர் பதவியே கிடைத்து இருக்காது என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு:

தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரமற்றவை என, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக பேசுகையில், “நாங்கள் கண்டுபிடித்த உண்மை ஒரு அணுகுண்டு. இந்த அணுகுண்டு வெடிக்கும்போது, நாட்டில் தேர்தல் ஆணையத்தைப் பார்க்க முடியாது" என ராகுல் காந்தி பேசினார். ஆனால், எந்தவித பாரபட்சமும் இன்றி செயல்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. இந்நிலையில், நாட்டில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது என்றும், கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது எனவும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

இறந்துபோன தேர்தல் முறை - ராகுல் காந்தி

டெல்லியில் நடைபெற்ற வருடாந்திர சட்ட மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, ஒரு மக்களவைத் தேர்தலில் எப்படி மோசடி செய்ய முடியும், எப்படி மோசடி செய்யப்பட்டது என்பதை வரும் சில நாட்களில் நாங்கள் மக்களுக்கு நிரூபிக்கப் போகிறோம்.  உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. இந்தியப் பிரதமர் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்.15-20 இடங்கள் குறைவாக வென்றிருந்தால் அவர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க மாட்டார்,

தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு இப்போது இல்லை, அது இறந்துவிட்டது. இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க எங்களுக்கு 6 மாதங்கள் இடைவிடாத வேலை தேவைப்பட்டது. மக்களவைத் தேர்தல் எப்படி திருடப்படுகிறது என்பதை நீங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் பார்ப்பீர்கள். 6.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள், அவர்களில் 1.5 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள்.

”4 மாதங்களில் ஒரு கோடி வாக்காளர்கள்”

தேர்தல் முறை பற்றி நான் சமீப காலமாக பேசி வருகிறேன். 2014 முதல் ஏதோ தவறு இருப்பதாக எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்கனவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அமோக வெற்றிகளைப் பெறும் திறன். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுகுறித்து நாங்கள் பேசும் போதெல்லாம், ஆதாரம் எங்கே? என கேள்வி எழுப்பினார்கள்.

பிறகு, மகாராஷ்டிராவில் ஏதோ நடந்தது. மக்களவை தேர்தலில் நாங்கள் அங்கு வெற்றி பெற்றோம். பின்னர் 4 மாத இடைவெளியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தோற்றது மட்டுமல்ல, அழிக்கப்பட்டோம். இதையடுத்து தேர்தல் முறைகேடுகளை நாங்கள் தீவிரமாகத் தேடத் தொடங்கினோம். மகாராஷ்டிராவில், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு இடையில் 1 கோடி புதிய வாக்காளர்கள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். அந்த வாக்குகளில் பெரும்பகுதி பாஜகவுக்குச் செல்கிறது. இப்போது எங்களிடம் ஆதாரம் உள்ளது என்பதற்கு நான் எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன்” என ராகுல் காந்தி பேசியுள்ளார். ஆனால், இதுதொடர்பான ஆதாரங்கள் அல்லது தரவுகளை தற்போது வரை ராகுல் காந்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
Jana Nayagan: எச்.வினோத் கேள்விக்கு
Jana Nayagan: எச்.வினோத் கேள்விக்கு "பதில் சொல்லுங்கள் ஃப்ராடுகளே.." கரூர் விவகாரத்தில் தவெக கேள்வி!
NEET: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்டத்திருத்த மசோதா - என்ன இருக்கிறது?
NEET: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்டத்திருத்த மசோதா - என்ன இருக்கிறது?
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget