மேலும் அறிய

பிரதமர் மோடி என்னை கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலால் ஆச்சரியப்பட்டார் - அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியது குறித்து கேட்டதற்கு, வெளியிடட்டும் அது அவருடைய இஷ்டம் என கூறினார் அமைச்சர் துரைமுருகன்

கடந்த ஆண்டு பொன்னை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதம் அடைந்த காட்பாடி தொகுதிக்குட்பட்ட மேல்பாடி தரைபாலம் 12.94 கோடியிலும். பொன்னை அணைகட்டை ரூ.19.50 கோடியிலும் புனரமைத்தல் பணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசுகையில், “இந்த நிதிநிலை அறிக்கையிலேயே காட்பாடிக்கு சிப்காட் வந்துவிடும். அதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதேபோல் காங்கேய நல்லூர்- சத்துவாச்சாரி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்க்கு 100 கோடி நிதி 2 நாட்களுக்கு முன்பு தான் ஒதுக்கப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஒரு நாள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நான் சந்தித்து பேசும் அவர் என்னிடம் கேட்டார்,  ‘நீங்க தானே திமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவையில் எவ்ளோ நாளாக இருக்கீங்க’ என்று. நான் 54 ஆண்டு என்றதும் "What 54 Years" என ஆச்சரியப்பட்டு. ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் அதற்கு, இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை என கூறினார் மோடி. 12 முறை போட்டியிட்டவர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. இதற்கு காரணம் காட்பாடி தொகுதியையும், மக்களையும் எனது கோயிலாக, தாயாக பார்க்கிறேன். தமிழகத்திலேயே 2 ஆண்டில் அதிக பணிகளை செய்தது காட்பாடி தொகுதி தான்.

 


பிரதமர் மோடி என்னை கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலால் ஆச்சரியப்பட்டார் -  அமைச்சர் துரைமுருகன்

தற்போது பொன்னை ஆற்றின் குறுக்கே தரைபாலம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் உள்ள சிவன் கோவில், அரிஞ்சய சோழன் மேல்பாடி போரில் இறந்ததன் நினைவால், ராஜரஜா சோழனால் கட்டப்பட்டத. இந்த கோயிலை பற்றி நான் பேசி பேசி அதிகமனோர் வருகை தருகிறார்கள். இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைக்கிறார்கள். இது மாநில அரசிடம் இருந்தால் உடனடியாக செய்திருப்போம் ஆனால் இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதன் அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பெண்கள் நீங்க கேட்களாம், அந்த ஆயிரம் ரூபாய் எங்க என கேட்ப்பிங்க, கவலை படாதிங்க விரைவில் வரும். தேர்தலுக்கு முன் அந்த பாக்கியை கொடுத்துவிடுவோம். தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் போது பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

 


பிரதமர் மோடி என்னை கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலால் ஆச்சரியப்பட்டார் -  அமைச்சர் துரைமுருகன்

 

 இப்போது உள்ள பெண்கள் குழந்தைகளை போட்டு பொத்து பொத்துன்னு அடிக்கிறாங்க அதற்கு காரணம் அவர்கள் பெற்றெடுப்பதில்லை கத்தரிக்கோல் தான் பெற்றிருக்கிறது. நேரா மருத்துவமனைக்கு செல்கிறார்கள் அங்கு மருத்துவர் வயிற்றை கிழித்து ஆபரேஷன் செய்து வயிற்றிலிருந்து குழந்தையை தலகாணியை போல் தூக்கி போட்டு விடுகிறார். பிறகு தாய் கேட்கிறாள் ஆணா பெண்ணா என கத்திரிக்கோல் பெற்றெடுத்தால் இப்படித்தான் கேட்பார்கள்” என பேசினார்.

 

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, வெளியிடட்டும் அது அவருடைய இஷ்டம். அதுக்கு நாம் என்ன செய்ய முடியும் என்றார். ஒரு காலத்தில் திராவிட கட்சிகள் தான் தமிழகத்தின் அடையாளம் ஆனால் இன்று பாஜகவை நம்பிதான் திராவிட கட்சிகள் உள்ளன என கேட்டதற்கு, அது அவர்களுடைய கருத்து என பதிலளித்தார். அண்ணாமலை ஜெயலலிதா உடன் ஒப்பிடுவது சரியா அதெல்லாம் எனக்கு தெரியாது என பதில் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget