மேலும் அறிய

Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தேர்தல் ஆதாயத்திற்காக சனாதனம் என்ற பிரச்சனையை திமுக கிளப்பி உள்ளது, சனாதனத்திற்கு உண்மையான அர்த்தம் உதயநிதிக்கு தெரியாது என மயிலாடுதுறையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்திருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்கள் பலர் பிரேமலதா விஜயகாந்திடம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 


Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஆதீனம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், சனாதானத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. சனாதானத்தை ஒழிப்பதற்கு மாநாடு என்று சொல்கிறார்கள். 


Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

ஆட்சியில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. கொசுவை ஒழித்து விட்டோம் டெங்குவை ஒழித்து விட்டோம் என்று உதயநிதி சொல்வது பெரிய விஷயம் இல்லை. வறுமை, லஞ்ச ஊழல், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், விலைவாசி உயர்வு, டாஸ்மார்க் கடைகளை ஒழிக்க வேண்டும், தமிழ்நாட்டில் மக்களுக்காக ஒழிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இதையெல்லாம் செய்து தமிழ்நாட்டை மக்களுக்கான நாடாக இந்தியாவின் முதன்மை மாநிலமாக நமது தமிழ்நாட்டை கொண்டு வந்தால் அதை நிச்சயமாக நாங்கள் வரவேற்போம். 


Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளில் முக்கியமாக திமுக அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்கள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை திமுக செய்யவில்லை. தேர்தலுக்காக உடனே சனாதனம் என்று சொல்கிறார்கள் இதனால் நமக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே எந்த பாகுபாடும் பிரிவினையும் கிடையாது. தேர்தல் ஆதாயத்திற்காக சனாதானம் என்ற வார்த்தையை சொல்லி பிரித்தாலும் சூழ்நிலையை திமுக உண்டாக்குகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அதை செய்கிறார். 


Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

இளைஞரான உதயநிதி புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அவரிடம் இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் ஆனால், பழைய அரசியலை கையில் எடுக்கிறார். நூறாண்டு காலத்திற்கு முன்பே பெரியார் ஜாதி மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதை செய்யவில்லை. அனைத்தும் கண்துடைப்பு தேர்தல் வந்துவிட்டால் சனாதனத்தை உயர்த்தி பேசி பத்து நாட்களுக்கு விவாதங்கள் நடத்துவார்கள். இதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன பலன் என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா, பிரித்தாலும் சூழ்ச்சி செய்து மக்களிடையே பாகுபாட்டையும் வேறுபாட்டையும் ஏற்படுத்தி ஒற்றுமையாக இருக்கின்ற மக்களை திசை திருப்பி குழப்பம் விளைவிக்கும் செயல்” என்று கூறினார். 


Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், “பாராளுமன்ற தேர்தலுக்கு உரிய நேரத்தில் எங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம். நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை உதயநிதி பட்டியலிடுகிறார். கணவன் இறந்தால் யார் இன்று உடன்கட்டை ஏறுகிறார்கள்? மொட்டை அடிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான் சனாதனம் என்று அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு உதாரணத்தை அவர்களால் காண்பிக்க முடியுமா? எதுவுமே இல்லாததை சொல்கிறார்கள். இன்று நாம் சந்திராயன், ஆதித்யா எல் ஒன்றை நிலவுக்கும், சூரியனுக்கும் அனுப்பி கொண்டு உள்ளோம்.


Premalatha Vijayakanth: பிரித்தாலும் சூழ்ச்சி! வேறுபாட்டை ஏற்படுத்தி ஒற்றுமையை குழப்பும் திமுக - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தற்கால அரசியலைப் பேச வேண்டிய உதயநிதி நூற்றாண்டு காலத்திற்கு பின்னோக்கி உள்ளார். இதனால் உதயநிதி மக்களின் மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்துள்ளார். மக்களின் ரத்தத்திலும் உணர்வுகளிலும் இந்தியா என்ற வார்த்தை ஊறிப் போய் உள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு நாட்டினுடைய பெயரை மாற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது எனவும் தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும்” தெரிவித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget