மேலும் அறிய

PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?

PM Modi : பிரதமர் மோடி கும்பமேளாவில் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததற்கு பொதுமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார்.

ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 66 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற 45 நாள் மகா கும்பமேளாவின்  குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு வலைப்பதிவில் ஒன்றை  எழுதினார்.

மகா கும்பமேளா:

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ். ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜையினில் கும்பமேளா கொண்டாடப்படுவது வழக்கம்.  கும்பமேளாவானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம்.  சில இடங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவது கும்பமேளா ஆகும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்பமேளா, அர்த் கும்பமேளா என்று அழைக்கப்படும். 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்பமேளா பூர்ண கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. தற்போது பிரயக்ராஜில் கொண்டாடப்பட்டிருப்பது மகா கும்பமேளா ஆகும். 

இதன் காரணமாகவே, இந்த மகா கும்பமேளாவில் பங்கேற்க தினசரி லட்சக்கணக்கான மக்கள் பிரயக்ராஜில் குவிந்தனர். மகா கும்பமேளா காரணமாக இந்திய ரயில்வே ஏராளமான சிறப்பு ரயில்களை இயக்கியது. ஆனாலும், பக்தர்கள் போதிய ரயில்கள் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் ரயில் கண்ணாடிகளை உடைத்து உள்ளே ஏறிய அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறின.

மன்னிப்பு கேட்ட பிரதமர்: 

இந்த நிலையில் பிரதமர் மோடி கும்பமேளாவில் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததற்கு பொதுமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார். "இவ்வளவு பிரமாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்வது எளிதல்ல என்பதை நான் அறிவேன். எங்கள் பக்தியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், கங்கை... யமுனை... சரஸ்வதி அன்னையிடம் எங்களை மன்னிக்குமாறு நான் பிரார்த்திக்கிறேன். நான் தெய்வீகத்தின் ஒரு வடிவமாகக் கருதும் மக்கள், பக்தர்களுக்கு நாங்கள் செய்யும் சேவையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."

இதையும் படிங்க: Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?

யோகி தலைமையிலான உ.பி. அரசுக்கு பிரதமர் மோடியின் பாராட்டு

உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்தை பிரதமர் மோடி பாராட்டினார். பிரயாக்ராஜில் இந்த மகா கும்பமேளாவை ஏற்பாடு செய்வது நவீன மேலாண்மை வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் கொள்கை நிபுணர்களின் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது என்றார். உலகளவில் இவ்வளவு பெரிய அளவில் ஒன்றுகூடுவதற்கு ஈடு இணையே இல்லை என்றும் அவர் கூறினார்.

"முறையான அழைப்பிதழ்களோ அல்லது முன் அட்டவணைகளோ இல்லாமல், திரிவேணி சங்கமத்தில் ஆற்றங்கரையில் கோடிக்கணக்கான் பக்தர்கள்  கூடியிருந்தனர் என்பதைப் பார்த்து உலகம் வியப்படைகிறது. மகா கும்பமேளாவிற்கான தங்கள் பயணத்தைத் தொடங்கிய யாத்ரீகர்கள், புனித சங்கமத்தில் புனித நீராடுவதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தனர்" என்று பிரதமர் மோடி எழுதினார்.

இதையும் படிங்க: இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்றைய இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கையில் மகா கும்பமேளாவில் பங்கேற்பதைக் காண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். "இதுபோன்ற நிகழ்வுகளில் இந்தியாவின் இளைய தலைமுறையினர் தீவிரமாக ஈடுபடுவது ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்புகிறது. நமது இளைஞர்கள் நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளின் வழிகாட்டிகள் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது, அவற்றை அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தங்கள் பொறுப்பைப் புரிந்துகொள்கிறார்கள்," என்று அவர் எழுதினார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Holiday Special Class: மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
Embed widget