PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : பிரதமர் மோடி கும்பமேளாவில் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததற்கு பொதுமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார்.

ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 66 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற 45 நாள் மகா கும்பமேளாவின் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு வலைப்பதிவில் ஒன்றை எழுதினார்.
மகா கும்பமேளா:
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ். ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜையினில் கும்பமேளா கொண்டாடப்படுவது வழக்கம். கும்பமேளாவானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். சில இடங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவது கும்பமேளா ஆகும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்பமேளா, அர்த் கும்பமேளா என்று அழைக்கப்படும்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்பமேளா பூர்ண கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. தற்போது பிரயக்ராஜில் கொண்டாடப்பட்டிருப்பது மகா கும்பமேளா ஆகும்.
இதன் காரணமாகவே, இந்த மகா கும்பமேளாவில் பங்கேற்க தினசரி லட்சக்கணக்கான மக்கள் பிரயக்ராஜில் குவிந்தனர். மகா கும்பமேளா காரணமாக இந்திய ரயில்வே ஏராளமான சிறப்பு ரயில்களை இயக்கியது. ஆனாலும், பக்தர்கள் போதிய ரயில்கள் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் ரயில் கண்ணாடிகளை உடைத்து உள்ளே ஏறிய அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறின.
மன்னிப்பு கேட்ட பிரதமர்:
இந்த நிலையில் பிரதமர் மோடி கும்பமேளாவில் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததற்கு பொதுமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார். "இவ்வளவு பிரமாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்வது எளிதல்ல என்பதை நான் அறிவேன். எங்கள் பக்தியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், கங்கை... யமுனை... சரஸ்வதி அன்னையிடம் எங்களை மன்னிக்குமாறு நான் பிரார்த்திக்கிறேன். நான் தெய்வீகத்தின் ஒரு வடிவமாகக் கருதும் மக்கள், பக்தர்களுக்கு நாங்கள் செய்யும் சேவையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."
இதையும் படிங்க: Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
யோகி தலைமையிலான உ.பி. அரசுக்கு பிரதமர் மோடியின் பாராட்டு
உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்தை பிரதமர் மோடி பாராட்டினார். பிரயாக்ராஜில் இந்த மகா கும்பமேளாவை ஏற்பாடு செய்வது நவீன மேலாண்மை வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் கொள்கை நிபுணர்களின் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது என்றார். உலகளவில் இவ்வளவு பெரிய அளவில் ஒன்றுகூடுவதற்கு ஈடு இணையே இல்லை என்றும் அவர் கூறினார்.
"முறையான அழைப்பிதழ்களோ அல்லது முன் அட்டவணைகளோ இல்லாமல், திரிவேணி சங்கமத்தில் ஆற்றங்கரையில் கோடிக்கணக்கான் பக்தர்கள் கூடியிருந்தனர் என்பதைப் பார்த்து உலகம் வியப்படைகிறது. மகா கும்பமேளாவிற்கான தங்கள் பயணத்தைத் தொடங்கிய யாத்ரீகர்கள், புனித சங்கமத்தில் புனித நீராடுவதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தனர்" என்று பிரதமர் மோடி எழுதினார்.
இதையும் படிங்க: இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்றைய இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கையில் மகா கும்பமேளாவில் பங்கேற்பதைக் காண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். "இதுபோன்ற நிகழ்வுகளில் இந்தியாவின் இளைய தலைமுறையினர் தீவிரமாக ஈடுபடுவது ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்புகிறது. நமது இளைஞர்கள் நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளின் வழிகாட்டிகள் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது, அவற்றை அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தங்கள் பொறுப்பைப் புரிந்துகொள்கிறார்கள்," என்று அவர் எழுதினார்.






















