மேலும் அறிய

Kanimozhi Karunanidhi : ‘பிரதமர் மோடி நிகழ்ச்சி அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு’ மீண்டும் வந்தது எப்படி..?

’அழைப்பிதழில் பெயர் இடம்பெறாத நிலையில், பிரதமர் மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்க கனிமொழி முடிவு செய்திருந்தார்’

தூத்துக்குடியில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பெயர் இன்றி வெளியான அழைப்பிதழால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனிமொழி பெயர் இல்லாத அழைப்பிதழ்
கனிமொழி பெயர் இல்லாத அழைப்பிதழ்

பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு?

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றபின் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

தூத்துக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி

இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுறைகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைக்கிறார் பிரதமர் மோடி. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அழைப்பிதழில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா ஸ்னோவால், சாந்தனு தாக்கூர், நாயக் பெயர்களும் மாநில அமைச்சர்களான ஏ.வ.வேலு மற்றும் கீதா ஜீவன் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

கனிமொழி பெயர் இடம்பெறாததற்கு கடும் எதிர்ப்பு

ஆனால், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பெயர் இடம்பெறவில்லை. மாநில அமைச்சர்கள் பெயரை போட்டுவிட்டு, தூத்துக்குடியின் எம்.பியான கனிமொழி பெயரை எப்படி போடாமல் விட்டார்கள் என்று நேற்று சமூக வலைதளங்களில் மத்திய அரசை விமர்சித்து திமுகவினர் பதிவு செய்தனர்.Kanimozhi Karunanidhi : ‘பிரதமர் மோடி நிகழ்ச்சி அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு’ மீண்டும் வந்தது எப்படி..?

இரண்டாவதாக வெளியான புதிய அழைப்பிதழில் கனிமொழி பெயர்

இதனை தொடர்ந்து இரண்டாவதாக மற்றொரு அழைப்பிதழ் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பெயர் இடம் பெற்றது. ஆனால், முதல் அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த கீதா ஜீவன் பெயர் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் கனிமொழி பெயர் அச்சிடப்பட்டிருந்தது.Kanimozhi Karunanidhi : ‘பிரதமர் மோடி நிகழ்ச்சி அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு’ மீண்டும் வந்தது எப்படி..?

கனிமொழி பெயர் விடுபட்டது தவறுதலாலா இல்லை திட்டமிட்டா ?

தூத்துக்குடி தொகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கான நபராகவும் அந்த தொகுதியின் எம்.பியாகவும் இருக்கும் கனிமொழி பெயரை மத்திய அரசு அழைப்பிதழில் முதலில் அச்சிடாமல் விட்டது தவறுதலாலா அல்லது திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்திருக்கிறது. பல்லடம் பொதுக்கூட்டத்தில் திமுகவை தாக்கி பிரதமர் மோடி பேசிய நிலையில், மக்களவை உறுப்பினராக இருக்கும் கனிமொழி பெயர் புறக்கணிக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளார்.

நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்த கனிமொழி - புதிய அழைப்பிதழால் மனம் மாறினார்

இந்நிலையில், பெயர் அச்சிடப்படாத நிலையில் இன்று நடைபெறும் பிரதமர் நிகழ்ச்சியை புறக்கணிக்க முதலில் கனிமொழி முடிவு செய்திருந்ததாகவும் பின்னர் அழைப்பிதழில் பெயர் அச்சிடப்பட்டு அதற்கான விளக்கமும் அவருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்றும் அவரது அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு ?

பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் பங்கேற்கும் அழைப்பிதழில் பெயர் இடம்பெறவில்லை என்றும் அதுமட்டுமின்றி தன்னுடைய சொந்த தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன்னை முறையாக அழைக்கவில்லை என்பதால் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Kanimozhi Karunanidhi : ‘பிரதமர் மோடி நிகழ்ச்சி அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு’ மீண்டும் வந்தது எப்படி..?

ஆனால், ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்படும் நிகழ்ச்சி தொடர்பாக தன்னுடைய பெயரில் பெரிய அளவில் விளம்பரங்களையும் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகள் அனுபவம். கள செய்தியாளர், கண்டண்ட் ரைட்டர், அசைன்மெண்ட் பொறுப்பாளர், டிக்கர் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் வெற்றிகரமாக பணியாற்றியவர் / பணியாற்றி வருபவர். கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதியும், அரசியல், நிர்வாக, கலை ஆளுமைகளின் நேர்காணல் எடுத்தும் வருபவர். தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு விடைதாள் முறைகேடு, மத்திய அரசுகளின் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான செய்திகளை பிரத்யேகமாக வழங்கியவர்.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Akshay Kumar: 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Akshay Kumar: 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Edappadi Palanisamy: “தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
Embed widget