மேலும் அறிய

Thangam Thennarasu: ஊழலை பற்றி பேசுவதற்கு அதிமுகவிற்கு தகுதியில்லை - தங்கம் தென்னரசு பேச்சு!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஈரோட்டில் நடந்த பொதுகூட்டத்தில் பச்சை பொய்களை கூறியிருப்பதாகவும், தோல்வி பயத்தில் மக்களின் மனதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஊழலை பற்றி பேசுவதற்கு அதிமுகவிற்க்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் அவர்கள் எத்தனை முகமூடிகள் போட்டாலும் இந்த தேர்தலோடு அதிமுக தூக்கி எரியபடும் என  தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு,ஈரோடு திமுக தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச்  சந்தித்தார். அப்போது பேசிய அவர்,எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஈரோட்டில் நடந்த பொதுகூட்டத்தில் பச்சை பொய்களை கூறியிருப்பதாகவும், தோல்வி பயத்தில் மக்களின் மனதில் தேவையில்லாத குழப்பத்தைக் ஏற்படுத்தியிருக்கிறார்.என்றும்,10 ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒரு பகுதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஈரோடுக்கு ஏதும் செய்யவில்லை. அவர் சொன்ன பொய்கள் எல்லாம் கேலிக்கூத்தானவை. என அவர் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆட்சியில் செய்யாத திட்டங்கள் ,கட்சிக்கு செய்த தூரோகங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே என்றும்
பாஜகவின் பேச்சை கேட்டு தமிழகத்திற்க்கு கெடுதல் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டிய தங்கம் தென்னரசு,
நீட் விவகாரம், உதய் மின் திட்டத்தால் பாதிப்பு,மேகதாது அணை பிரச்சனையில் இணைக்கமாக சென்றது, விவசாயிகளுக்கு பல்வேறு தூரோகம் செய்தது..இப்படி பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கி கொண்டே போகலாம் எனவும் அவர் தெரிவித்தார்

ஊழலை பற்றி பேச அதிமுகவினருக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. எனவும் அவர்களது ஆட்சியில் செய்த பல்வேறு ஊழல்களால் தான் மக்கள் அவர்களை தூக்கி எரிந்தாகவும் தெரிவித்த அவர்,குட்கா பற்றி அவர் பேசுவதெல்லாம் வேடிக்கையாக இருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் விவாகரத்தில் பலர் சுட்டு கொல்லப்பட்டது,பொள்ளாச்சி பாலியல் விவாகாரத்தில் பல உண்மைகளை மூடி மறைத்து. இதையெல்லாம் மக்களுக்கு தெரியும். எனவும் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

ஈரோட்டு இடைத்தேர்தலில் களத்தில் அதிமுக எத்தனை முகமூடிகள் போட்டாலும் ,இந்த தேர்தலோடு அதிமுக தூக்கி எரியப்படும். எனவும், ஊழலை பற்றி பேச அவர்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.பல இடைத்தேர்தல்களில் அவர்கள் எல்லாம் செய்ததைக் நாங்கள் செய்ததாக சொல்கிறார்கள். திமுக அரசின் அமைச்சர்கள் ஈரோட்டில்  கெடாவிருந்து நடத்துகிறாரகள் என்று சொல்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்..நான் தயிர் சாதம் தான் தற்போது சாப்பிட்டு வந்தேன் என நகைப்புடன் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு,ஈரோட்டில் பல திட்டங்களுக்கு முதற்கட்டமாக 300 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் படிபடியாக வேலைகளை செய்வோம்.எனவும்
ஈரோடு வருங்காலத்தில் சீர்மிகு நகரமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் செய்த திட்டங்கள் ஏதுமில்லை என்பதால் ஈரோடு திண்டலில் எடப்பாடி பழனிச்சாமி தண்டால்  எடுத்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர்,தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிதி பற்றாக்குறை 2177 கோடியாக குறைந்துள்ளதாகவும் வருவாய் பற்றாக்குறை 1472 கோடியாக குறைந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியை விட நிதி நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் கூட்டணி தர்மத்தை மதித்து அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர், அதிமுகவை  போல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய தொகுதியைக் பறித்து கொண்டு நாங்கள் நிற்கிறோம் என்ற உணர்வில் நாங்கள் இல்லை..எனவும் அவர் தெரிவித்தார்.

திமுகவிற்க்கு எந்த காலத்திலும் தோல்வி பயமில்லை எனவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு இடத்தில் பெகாஸஸ் என்கிற முறையில் இரட்டை இலை சின்னத்தை, கிரேக்க  தொண்மையின் அடையாளத்தில் குதிரையின் அடையாளம் எனக் கூறி   நினைவு சின்னம் அமைத்தார்களே அது அவர்களது கட்சியின் நிதியிலா வைக்கப்பட்டது என பேனா நினைவு சின்னம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்கு தங்கம் தென்னரசு பதிலளித்தார்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget