மேலும் அறிய

திடீரென வந்த Phone Call ; அது ரகசியம் , அது சொல்ல முடியாது என பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு

செய்தியாளர் சந்திப்பின் போது யாருடன் தொலைபேசியில் பேசினர்கள் என்ற கேள்விக்கு , அது சொல்ல முடியாது , அது ரகசியம் என அமைச்சர் சேகர்பாபு பதில்

அன்னம் தரும் அமுதக் கரங்கள்

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்று வரும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியானது ஏழுகிணறு பகுதியில் உள்ள அம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு ;

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்று வரும் அன்னம் தரும் அமுகக்கரங்கள் நிகழ்ச்சியின் 276 ஆவது நாளாக பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். மக்கள் மகிழ்ச்சியாக உணவுகளை பெற்று உண்ணு வருகிறார்கள்.

பஞ்சாங்கத்தின் முறைப்படி திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்தான கேள்விக்கு ;

இதே பாஜக 2021 - ம் ஆண்டு முதல்வருக்கு கட்டம் சரியில்லை அவர் ஆட்சி அமைக்கவே முடியாது எனக் கூறினார்கள். ஆனால் முதலமைச்சர் ஆனார். அன்றிலிருந்து எதிர்த்து நிற்கின்ற அனைவருக்கும் தோல்வியை பரிசாக தந்து கொண்டிருக்கிறார். அதே போல 2026 ஆம் ஆண்டும் எதிர்த்து நிற்கின்ற இது போன்ற துருப்பிடித்த பாஜக கூற்றுக்கும், பஞ்சாங்கத்தை மாற்றிக் காட்டக் கூடிய மதிநுட்பம் கொண்டவர் எங்கள் முதல்வர்.

கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு ;

நீதிமன்ற உத்தரவுபடி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது தேர்தல் அதிகாரிளை திமுக மிரட்டுவதாக எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு ;

எப்படி அவர்களை மிரட்ட முடியும். அவர்கள் கட்சி சுத்தமாக Filed ல் இல்லை BLA 2 அவர்களெல்லாம் தமிழகம் முழுவதும் போட முடியவில்லை. பாஜகவிலும் அவர்கள் போட முடியவில்லை,   வாக்காளர்களுக்கு உதவியாக போவது கூடவா தவறு , இதில் எப்படி முறைகேடு செய்ய முடியும் , சொல்லப் போனால் மக்களை விழிப்புணர்வுக்கு ஏற்படுத்த மக்களை உதவுவதற்காக திமுக எப்போதும் போல் வாக்குரிமை பெற்று தருவதும் முன்னிலையில் உள்ளதை பாராட்ட வேண்டும்.

துணை முதலமைச்சர் அறிவால் அந்த பதவிக்கு வரவில்லை அவரது தந்தை முதலமைச்சர் என்பதால் பதவிக்கு வந்தார் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்தான கேள்விக்கு ;

கடுமையான உழைப்பாளி அவர், தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுமென்றால் தந்தையின் பெயருக்காக பதவியை பெற்றிருக்கலாம். எங்கள் முதல்வர் துணை முதல்வரை களத்திற்கு கொண்டு வந்த நாள் முதல் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்றாலும் சரி, 5 லட்சம் புதிய இளைஞர்களை கொண்டு வருவதாலும் சரி, பல்வேறு வகையில் அவர் பணி ஆற்றி வருகிறார்.

துணை முதலமைச்சர் அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. தமிழிசை போல் தந்தையாரால் அவருக்கு தகுதி கிடைக்கவில்லை. உழைப்பால் இந்த தகுதியை தமிழக முதல்வர் தந்து கொண்டிருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் செய்தியாளர் சந்திப்பின் போது நீங்கள் தொலைபேசியில் பேசியது யாரோடு என்ற கேள்விக்கு ; 

அது சொல்ல முடியாதுல அது ரகசியம் என பதில் அளித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget