மேலும் அறிய

Vaiko vs Mallai Sathya: மதிமுகவில் அடித்த புயல்! மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோவின் அதிரடி உத்தரவு!

ம.தி.மு.க சட்ட திட்டங்களின்படி, துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சி.ஏ. சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாகவும் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுகவின் ஒற்றுமைக்கும், நன்மதிப்புக்கும் கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்தி நிரந்தரமாக நீக்கி வைகோ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்லார்

மல்லை சத்யா துரை வைகோ மோதல்:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவின் அரசியல் பிரவேசத்தில் இருந்தே மதிமுகவில் குழப்பங்கள் வெடிக்க தொடங்கியது. வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய வைகோவே தனது மகனை முதன்மை செயலாளராக்கி வாரிசு அரசியல் செய்கிறார் என வைகோ மீது சொந்த கட்சி நிர்வாகிகளே குற்றம் சாட்டினர். அதிலும் துரை வைகோ சீனியர்களை ஓரங்கட்டுவதாக மோதல் வர ஆரம்பித்தது. கட்சியின் சீனியரும் மதிமுக துணை பொதுச்செயலாளருமான மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே அதிகார மோதல் வெடித்தது.

மல்லை சத்யாவை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்பது வரை சென்ற இந்த மோதலில், வைகோ தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது அதிருப்தியை வெளிப்படையாக மல்லை சத்யா தெரிவித்தார். இதனால் கடுகடுத்த வைகோ விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல் தன்னுடன் நீண்ட நாட்களாக தன்னுடன் போராட்டத்தில் கலந்துக்கொண்ட மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

விளக்கம் கேட்டு சஸ்பெண்ட்:

 இந்தநிலையில் ஆகஸ்ட் 2ம் தேதி வைகோவைக் கண்டித்து சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் மல்லை சத்யா. அதில் பேசிய அவர், கூவம் நதியின் நிலைக்கு ம.தி.மு.க சென்றுகொண்டிருக்கிறது. மகனுக்கு பதவிகளை கொடுத்து தந்தையாக நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரசியலில் தோற்றுவிட்டீர்கள். எங்களுடைய வயிற்றெரிச்சல் உங்களுடைய அரசியல் சதுரங்கத்தை தூள் தூளாக்கும் என கொந்தளித்தார்.

இந்த போராட்டத்தால் கோபமான வைகோ, அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார். மேலும் 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் கொடுக்குமாறு காலக்கெடு விதித்தார். 

மல்லை சத்யா நீக்கம்:

இந்த நிலையில் மல்லை சத்யாவிடம் இருந்து விளக்கம் பெறப்பட்ட நிலையில் அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைகோ உத்தரவிட்டுள்ளார். அதில் "கட்சியின் கொள்கை, நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராகவும் செயல்பட்டார்" என்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக, ம.தி.மு.க சட்ட திட்டங்களின்படி, துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சி.ஏ. சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாகவும் வைகோ அறிவித்துள்ளார்.

”எதிர்பார்த்த ஒன்று”-மல்லை சத்யா

இந்த அறிவிப்பு தனது அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றும், இதுதான் நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என மல்லை சத்யா கூறியுள்ளார். ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார் என்றும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget