ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்திருப்பது திமுகவிற்கு பலவீனம் அதிமுகவிற்கு பலம் - ஆர்.பி.உதயகுமார் பேட்டி !
நடிகர் விஜய் பரீட்சை எழுதினால் தான் அவர் பாசா அல்லது பெயிலா என தெரியவரும். - ஆர்.பி.உதயகுமார்.

எந்த விளைவும் ஏற்படாது
மதுரை மண்டேலா நகர் பகுதியில் மார்ச் -ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வில் சேவை செய்வதற்காக அதிமுக அம்மா பேரவை சார்பாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..." அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்ட நபர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் வேறு முகாம்களுக்கு மாரி செல்கிறார்கள் அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு என்பது புதிதல்ல. எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலேயே இது போன்ற சிலர் மாற்று முகாம்களுக்கு சென்று உள்ளனர். அப்படி போபவர்களைப் பற்றி மக்கள் ஒன்றும் பொருட்படுத்த மாட்டார்கள். உலகத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நரேந்திர மோடி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி பரப்புரை செய்ய வருகை தருகிறார். இதனை திசை திருப்பவும் மடைமாற்றமும் செய்யவும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதையெல்லாம் நாங்கள் சவாலாக மன உறுதியுடன் எதிர்கொள்வோம். 2026 ல் எடப்பாடி பழனிச்சாமி தான் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆக வருகை தர உள்ளார். தற்போது அதிமுகவில் உரிமை மீட்பு குழு பொதுச் செயலாளர் என சிலர் குழப்பம் செய்து வந்தனர். இனிமேல் அதிமுக என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்துவிட்டார்கள். இவர்கள் செல்வதால் அதிமுகவிற்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.
15 தேர்தல் வாக்குறுதி
இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி 15 தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். மத்திய அரசு மாநில அரசும் இணைந்து டபுள் இன்ஜின் போல செயல்பட வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நிர்வாகம் அப்போதுதான் நிர்வாகம் சீராக சிறப்பாக செயல்படும் ஆனால் இதனை ஓடாத இன்ஜின் என்று விமர்சனம் செய்கிறார்கள். இது விவாதத்திற்கு நன்றாக இருக்கும் வாழ்வாதாரத்திற்கு நன்றாக இருக்காது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொடுத்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அதனைப் பெற்றுக் கொடுத்தவர் , அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை காட்டி அரசியல் செய்தார்கள். இனி 100 செங்கலை காட்டினாலும் , வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தான் செங்கோலை அவரது கையால் பிடிப்பார்.
நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு
அவர் இன்னும் பரீட்சை எழுதவில்லை தற்போது தான் பரீட்சை எழுத செல்கிறார். பரிச்சை எழுத செல்பவர்களிடம் கேட்டால் அனைவரும் நாங்கள் பாஸ் ஆகும் என்று தான் கூறுவார்கள் என யாரும் கூற மாட்டார்கள். அதுபோல் நடிகர் விஜய் பரீட்சை எழுதினால் தான் அவர் பாசா அல்லது பெயிலா என தெரியவரும். அதிமுகவில் சாதாரண எளிய தொண்டரை முதலமைச்சராக ஆக்கி அழகு பார்க்கப்பட்டுள்ளது. திமுகவில் இதேபோல் ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக ஸ்டாலின் அறிவிப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார். ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்திருப்பது திமுகவிற்கு பலவீனம் அதிமுகவிற்கு பலம் என தெரிவித்தார்.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















