திமுக - காங்கிரஸ் இடையே போட்டியா? மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரசார் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு !
வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாகவும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். எனவும் கூறி மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் குறித்து வடக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி பேச்சு விவகாரம் - மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியை பெறுவதில் திமுக - காங்கிரஸ் இடையே போட்டி - வடக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரசார் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.
திமுகவிற்கும் காங்கிரசிற்கும் முற்றும் மோதல் மதுரையில் பரபரப்பு
மதுரை மாநகர் திமுக சார்பில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸை சேர்ந்த மாணிக்தாகூர், ஜோதிமணி அவர்கள் MPயாக ஆகிவிட்டார். இனி யாரும் எம்.எல்.ஏ., ஆனா என்ன ஆகலைனா என சொல்லி அதுல பங்கு வேணும், இதுல பங்கு வேணும் என சொல்றாங்க இதையெல்லாம் தலைமை புரிஞ்சு அடுத்து இவனுகளுக்கு சீட்டே குடுக்ககூடாது. காங்கிரஸ்க்கு நம்மலே சீட் கொடுக்க விடக்கூடாது இல்லனா அதுக்கான வேலைய நம்ம ஆளுகளே பார்ப்பார்கள் என (காங்கிரஸை உள்ளடி வேலை பார்த்து தோற்கடிக்கனும்) என்பது போல பேசினார்.
மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது
மேலும்.. “நம்ம இல்லைனா இந்திய கூட்டணியே கிடையாது. இந்தியா கூட்டணியில் டெல்லியில் இருக்குதுனா அதுக்கு காரணம் ஸ்டாலின், மம்தா பானர்ஜி என ராகுலை கேலி செய்யும் வகையில் பேசினார். இன்னும் சொல்ல பல விவகாரங்கள் உள்ளது அதனை எல்லாம் கூறினால், நல்லதல்ல தப்பாக போய்விடும். ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் ஓட்டுதான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது என்றார்.
Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது எனவும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் விருதுநகர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்..,” இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும், Typo Error-கட்சிகள்
முடிந்து விட்டது எனவும் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
திமுக தங்களது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்க வேண்டும். என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிவந்த நிலையில் தற்போது நேருக்கு நேராக கருத்துமோதல்களை வெளிப்படுத்திவருவது திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. இந்நிலையில் திமுக எம்எல்ஏவின் கருத்திற்கு எதிராக காங் எம்.பி. ஜோதி மணியும் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியை பெறுவதில் காங்கிரஸ் திமுக உறுப்பினர் கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாகவும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறி மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Before You Go
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
ட்ரெண்டிங் செய்திகள்






















