மேலும் அறிய

M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!

”கண்கள் பனித்து, இதயம் இனித்த நிலையில், மு.க.அழகிரி எப்போது வேண்டுமானாலும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது”

ஒரு காலத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை கட்டி ஆண்டவராக அறியப்படும் மு.க.அழகிரி, விரைவில் மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்படவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி திமுக வட்டாரத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

முதல்வருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிய அழகிரி ஆதரவாளர்கள்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். அழகிரி ஆதரவாளர்களாக அறியப்படும் நபர்கள் வேறு யாருடைய ஆதரவாளர்களாகவும் மாறாமல், அழகிரியிடம் அதிகாரம் இருந்தப்போது எப்படி இருந்தார்களோ அதே மாதிரியே அதிகாரம் இல்லாத சூழலிலும் அவருடைய ஆதரவாளர்களாகவே தொடர்ந்து  இத்தனை ஆண்டுகளாக பயணித்து வருகிறார்கள்.

ஆனால், தொடர்ந்து அரசியல் களத்தில் பங்களிப்பு இல்லாமல் ஒதுங்கியே இருந்தால், காலப்போக்கில் தங்களுடைய அரசியல் வாழ்க்கையே சூனியமாகிவிடும் என்பதை அறிந்த அவர்கள், இது குறித்து அழகிரியிடம் தெரிவித்ததாகவும், அவர்கள் கருத்தில் உடன்பட்ட அழகிரியும், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளும்படியும் கோரிக்கை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் 9 பேர் மன்னிப்பு கடிதம் எழுதி, அதனை மதுரை நகர் திமுக மாவட்ட செயலாளர் கோ தளபதி வாயிலாக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அழகிரியின் நிழலாக இருக்கும் மன்னனும் கடிதம் எழுதினார்

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் அவரது விசுவாசியும் அவரின் நிழல் என்று அறியப்படுபவருமான மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனும் மன்னிப்பு கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரோடு, இசக்கிமுத்து உள்ளிட்ட 9 பேர் மன்னிப்பு கடிதம் எழுதி தங்களை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் திமுக தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளர்.

 மன்னிப்பு கடிதத்தில் எழுதியிருப்பது என்ன ?

இந்நிலையில், அழகிரி ஆதரவாளர் இசக்கிமுத்து என்பவர் எழுதியுள்ள மன்னிப்பு கடிதத்தில், நான் 1973ஆம் ஆண்டு முதல் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தததாகவும், வட்டச் செயலர் முதல் அவைத் தலைவர் வரை பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன் என்று குறிப்பிட்டு, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் தேர்தலில், அழகிரி ஆதரவாளர்களான நாங்களும் மனுதாக்கல் செய்தோம். ஆனால், எங்கள் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், கோபமடைந்த அழகிரி, இந்த விஷயத்தை திமுக தலைவர் மு.கருணாநிதி கவனத்திற்கு கொண்டுச் சென்று, அப்போதைய அமைப்பு செயலாளரை அழைத்து கடுமையாக கண்டித்தார். பின்னர், அவர் வெளிநாடு சென்ற நிலையில், சிலர் திமுக போட்டி பொதுக்குழு நடக்கும் என்று போஸ்டர் அடித்தனர். ஆனால், அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. எனவே எங்கள் நீக்கத்தை ரத்து செய்து, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் வேறு எந்த கட்சிக்கோ அமைப்புக்கோ நாங்கள் செல்லவில்லை என்பதை கவனத்தில் கொண்டு திமுக தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலை கருத்தில் கொண்டு முடிவு

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு பெற்று மீண்டும் அரசியல் களத்திற்கு வர வேண்டும் இல்லையென்றால் அரசியலில் தங்களுக்கு எதிர்காலம் இல்லாமல் ஆகிவிடும் என்பதை உணர்ந்து இந்த மன்னிப்பு கடிதம் எழுதப்பட்டிருப்பதால், வரும் தேர்தல்களில் மீண்டும் அழகிரியின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அழகிரியின் நிலை என்ன ?

கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தன்னுடைய தம்பியும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் இணக்கமாக செல்லும் முடிவை மு.க.அழகிரிஎடுத்துவிட்டதாகவும், முதல்வரும், அழகிரி மகன் தயா அழகிரி வேலூர் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றபோது இரண்டு முறை சென்று பார்த்து, அவருக்கான சிகிச்சையை முறையாக வழங்க மருத்துவர்களை அறிவுறுத்தியும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுத்தார். இந்நிலையில், இருவரும் கண்களும் பனித்து இதயம் இனித்துள்ளதால், விரைவில் அழகிரியும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

என்றும் அண்ணன்...

ஒரு வருடத்திற்கு முன்னர் ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், மு.க.அழகிரி என்றென்றும் என் அண்ணன் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget