மேலும் அறிய

ரூ.1,000 கோடி யாருக்கு சென்றது என சொன்னால்தான் அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும் - கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் தி.மு.க.வோ, அதி.மு.க.வோ இனிமேல் ஒற்றைகட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது புதிய தமிழகம் கட்சியின் கொள்கை நிலைப்பாடு.

டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை முறையாக விசாரித்து, ரூ.1000 கோடி யாருக்கு சென்றது என்பது குறித்து சொன்னால்தான், அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும் என கரூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளித்தார்.


ரூ.1,000 கோடி யாருக்கு சென்றது என சொன்னால்தான் அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும் - கிருஷ்ணசாமி

 

கரூர் மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 3% இட ஒதுக்கீடு மூலம் தேவேந்திர குல வேளாளர்களின் பறிக்கப்பட்ட உரிமை மீட்பு கருத்தரங்கம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை சாலையில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து தொண்டர்களிடம் பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் அக்கட்சியை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


ரூ.1,000 கோடி யாருக்கு சென்றது என சொன்னால்தான் அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும் - கிருஷ்ணசாமி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “நல்ல கல்வி, தரமான கல்வி NCRT பாட திட்டத்தின்படி சிபிஎஸ்சி திட்டத்தின் கீழ்தான் அனைத்து போட்டி தேர்வுகள் நடைபெறுகிறது. அது தமிழ்நாட்டில் வேண்டாம் என்று சொல்வது என்ன மனநிலை. தமிழகத்தில் உள்ள அரசியல் வாரிசுகள் சிபிஎஸ்சி பள்ளியில் படிக்க வைத்து விட்டு, சாதாரண குழந்தைகளுக்கு அதை கிடைக்காமல் செய்வது என்ன நியாயம் இருக்கிறது.

தாய்மொழி, ஆங்கிலம் இருக்கும்போது, இந்தி எங்கு திணிக்கப்படுகிறது. 60 ஆண்டுக்கு முன்பு இருந்த இந்தி எதிர்ப்பை இப்போது திமுக சொல்வது நியாயமில்லை. அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதே போன்று திமுக செயல்பட்டால் தமிழகத்தில் 2026 தேர்தலில் ஓட்டு கேட்க போக முடியாது.


ரூ.1,000 கோடி யாருக்கு சென்றது என சொன்னால்தான் அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும் - கிருஷ்ணசாமி
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி அனைத்து கிராமங்களிலும் வலுப்படுத்துவது குறித்தும், கட்சியின் 7-வது மாநில மாநாட்டை மதுரையில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரமாண்டமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை கூட்டம் மாவட்டந் தோறும் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை முறையாக விசாரித்து, ரூ.1,000 கோடி யாருக்கு சென்றது என்பது குறித்து சொன்னால்தான், அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும். தமிழகத்தில் இந்தி திணிக்கவில்லை. தமிழகத்தில் தேசியக்கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


ரூ.1,000 கோடி யாருக்கு சென்றது என சொன்னால்தான் அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும் - கிருஷ்ணசாமி

 

தமிழ்நாட்டில் தி.மு.க.வோ, அதி.மு.க.வோ இனிமேல் ஒற்றைகட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது புதிய தமிழகம் கட்சியின் கொள்கை நிலைப்பாடு. 2026-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். வெறும் கூட்டணி இல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் அமைச்சரவையில் பங்குபெற கூடிய வகையில் தேர்தலுக்கு முன்பாகவே குறைந்தபட்ச அம்ச திட்டத்தோடு கூட்டணியை முன்னெடுத்து செல்வதுதான் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு. தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Announcement: சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Announcement: சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு; என்சிஇடி தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!- என்ன தெரியுமா?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு; என்சிஇடி தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!- என்ன தெரியுமா?
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Embed widget