மேலும் அறிய

ராஜீவ் காந்தி பிறந்த நாள் : இரண்டு ஜோதி துவக்க விழாக்கள்.. குழம்பும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்

ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை என்ற பெயரில் நேற்று மற்றும் இன்று இரண்டு துவக்க விழா நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தியின், சமாதி உள்ள வீர் பூமிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  வருடா வருடம் ஆகஸ்டு மாதம் ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் 31 ஆம் ஆண்டு ராஜீவ்ஜோதி மதநல்லிணக்க யாத்திரை தொடக்க விழா நேற்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் செவ்வாய்கிழமை ( நேற்று) நடைபெற்றது. இதில்  ஸ்ரீபெரும்புதூர்  சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை ஜோதியை ஏற்றிவைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் : இரண்டு ஜோதி துவக்க விழாக்கள்.. குழம்பும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
 
 இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவூர் நாகராஜ், ராஜீவ்காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினர் முருகானந்தம், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர்  எஸ்.ஏ.அருள்ராஜ், உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த மதநல்லிணக்க ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களின் வழியாக சாலை மார்கமாக சென்று டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தியின் சமாதி உள்ள வீர்பூமியில் வரும் 19ம் úதி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுலகாந்தி ஆகியோரிடம் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் துரைவேலு  ஒப்படைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 

ராஜீவ் காந்தி பிறந்த நாள் : இரண்டு ஜோதி துவக்க விழாக்கள்.. குழம்பும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
இந்நிலையில் இன்று திடீர் திருப்பமாக,  சென்னை வடக்கு மாவட்ட தலைவர் திரவியம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர்  ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஜோதி ஏற்றி நினைவிடத்தில் இருந்து கொண்டு சென்றார். முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கி ஜோதி யாத்திரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர்   கலந்து கொண்டனர்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் : இரண்டு ஜோதி துவக்க விழாக்கள்.. குழம்பும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
 
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறுகையில், மாவட்ட தலைவர் திரவியம், சாலை வழியாக சுமார் 2500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, ஜோதியை டெல்லி எடுத்துச் செல்ல உள்ளனர். இதனை வருங்கால பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் கையில் கொடுக்க உள்ளனர். இதன் நோக்கம் ராஜீவ் காந்தி அவர்களின், நினைவுபடுத்தும் விதமாக  இருக்கும், அதேபோல காங்கிரசுக்கு எழுச்சியாக அமையும் , கண்டிப்பாக 2024 ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் : இரண்டு ஜோதி துவக்க விழாக்கள்.. குழம்பும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
 
இது குறித்து சாமுவேல் திரவியம் கூறுகையில், ராஜீவ் காந்தி அவர்களின் 31 வது பிறந்த நாளில் பிறந்தநாளில், இந்த ஜோதியை தில்லி வரைக்கும் எடுத்துச் செல்கின்றோம்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொண்டர்கள் சார்பாக மற்றும் இந்த ஜோதி என்பது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தரை வழியை வழக்கமாக 2500 km சென்று 19ஆம் தேதி காலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைத்து. 20ஆம் தேதி அங்கே ராஜ்காட்டில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அவர்கள் சமாதியில் நாங்கள் பிரார்த்தனை செய்ய உள்ளோம். இதற்காக எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ராஜூ காந்தி நினைவுத்தினுடைய அறக்கட்டளை உறுப்பினர்  முருகானந்தம் அவர்களுக்கும் மற்றும் இதற்கு அனுமதி அளித்த அகில இந்திய பொதுச் செயலாளர்  தினேஷ் குண்டு ராவ் அவர்களுக்கும் , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் : இரண்டு ஜோதி துவக்க விழாக்கள்.. குழம்பும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
ஒரே ஜோதி யாத்திரைக்கு இரண்டு துவக்க விழாக்கள் நடைபெற்று, இரண்டு ஜோதிகள் செல்வது காங்கிரஸ் கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு துவக்க விழாவிலும் கொண்டுவரப்பட்ட பேனரில்  "ராஜு ஜோதி யாத்திரை என பொறிக்கப்பட்டிருந்தது" என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget