மேலும் அறிய

Michaung Cyclone : முதல்கட்டமாக 500 உணவுப் பொட்டலங்கள்: ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்...

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யும் பணியைத் தொடங்கியிருக்கிறது இந்திய விமானப் படை

மிக்ஜாம் புயலின் பாதிப்புகள்

மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிப்புரம், செங்கல்பட்டு , திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையில் வடபழனி, சூளைமேடு, கோடம்பாக்கம், பெருங்குடி ராயப்பேட்டை , ஊரப்பாக்கம், துறைமுகம் , எண்ணூர் , வியாசர்பாடி , சைதாபேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மேல்மட்டம் அளவிற்கு நீர் புகுந்துள்ளதால் மக்களை அவர்களின் வீட்டில் இருந்து படகின் மூலம் வெளியேற்றி வருகிறார்கள் மீட்பு படையினர்.

மேற்குறிப்பிட்ட இடங்களில் பலவற்றில் பாதுகாப்பு காரணங்களால்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தொலை தொடர்புகள் அற்று மக்கள் தங்களது அருகில் இருக்கும் குழுக்களிடம் உதவிகளை நாடி இருக்கிறார்கள். மேலும் பல்வேறு இடங்களில் நீரில் இருந்து தப்பிக்க குழந்தைகள் , பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட தங்களது வீட்டில் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளார். தற்போதைய நிலைக்கு அவர்களின் முதன்மையான தேவையாக உணவு இருந்து வருகிறது. மீட்பு படையினர் தங்களால் எட்ட முடிந்த அளவிற்கு உணவு வழங்கி வந்தாலும் ஒரு சில இடங்களில் மக்களை தொடர்பு கொள்வது சிரமானதாக இருந்து வருகிறது.

ஹெலிகாப்டர் மூலம் உணவு

இப்படியான நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது இந்திய விமானப் படை. முதற்கட்டமாக அடையாறு மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் 500 உணவுப் பொட்டலங்கள் ஹெலிகாப்டர் மூலம் விநியோகம் செய்யப்பட்டன. இந்த உணவுப் பொட்டலங்களை மக்கள் தங்களது வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து பெற்றுக் கொண்டார்கள். நாளை முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் உணவு விநியோகம் நடைபெற இருப்பதாக  வருவாய்த் துறை அமைச்சர் கே.கே எஸ். எஸ் .ஆர் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல்

நேற்று முன் தினம் சென்னையை நெருங்க தொடங்கிய மிக்ஜாம் புயல் முந்தைய நாள் நள்ளிரவில் இருந்து ஆக்ரோஷத்தை தொடங்கியது. சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் இருந்த போது தொடங்கிய கனமழை மற்றும் சூறைக்காற்று நேற்றிரவு வரை தொடர்ந்து. இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளிக்கிறது. மழை வெள்ளத்திற்கு இதுவரை 12 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Russia Backs India: நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
Nadda Vs Karge: “அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
“அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
PB Balaji JLR CEO: ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
Embed widget