மேலும் அறிய

"எடப்பாடி குடும்பத்தைப்பற்றி ஸ்டாலின் என்றாவது பேசியிருக்கிறாரா?" - புகழேந்தி ஆவேசம்

நம் நாட்டை 4 பிரதமர்கள் ஆள்கிறார்கள் என எடப்பாடியால் பேச முடியுமா? அடுத்த நாளே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை எடப்பாடி வீட்டில் நடக்கும்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, வக்கீல் அய்யப்பமணி ஆகியோர் சேலம் எஸ்.பி ஸ்ரீ அபிநவ்விடம் புகார் மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில், "சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது தமிழகத்தை ஒரு முதல்வர் ஆட்சி செய்யவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன், மருமகன், மனைவி ஆகிய 4 பேர் ஆட்சியை நடத்துகிறார்கள். முதல்வருக்கு ஒன்றும் தெரியாது என்று சட்ட விரோதமாக கூறியுள்ளார். இந்த பேச்சு ஜனநாயகத்துக்கு விரோதமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வு பெற்ற முதல்வர் பதவியை அசிங்கப்படுத்தி இருக்கிறார். அரசியல மைப்பு சட்டத்திற்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் இந்த பேச்சு அமைந்துள்ளது. அதனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், "என்று கூறியுள்ளார். மனுவை பெற்ற எஸ்.பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார். 

இதையடுத்து எஸ்பி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது. தமிழகத்தை 4 முதல்வர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். இது சட்டவிரோத பேச்சாகும். கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, ஒருமுறையாவது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் துணைவியாரை பற்றியோ, குடும்பத்தாரை பற்றியோ பேசியது இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி மிகவும் அநாகரீகமாக தற்போது நடந்து கொண்டுள்ளார். இது ஒரு தேச துரோக பேச்சு. இதுவே, நம் நாட்டை 4 பிரதமர்கள் ஆள்கிறார்கள் என எடப்பாடியால் பேச முடியுமா? அடுத்த நாளே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை எடப்பாடி வீட்டில் நடக்கும். 

அதிமுக கட்சியின் பதிவு சின்னம் கேள்விக் குறியாக இருக்கிறது. இரட்டை தலைமை மீது புகார் கொடுப்பேன். தற்போது கூடும் பொதுக்குழு சட்டவிரோதமானது. சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் சுயமரியாதையை இழந்தவர் பாஜக தலைமையில் இருந்து வரும் உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு நடக்கிறது. ரவுடிகளை வைத்து நடத்துவார்கள். அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்தே பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றார்கள். ஆனால், தற்போது எதிர்க்கட்சி என பேசிக்கொள்கிறார்கள். தமிழகத்தில் தற்போது எதிர்கட்சி அதிமுக தான். ஆனால், அவர்கள் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஜோக்கர். அவர் ஐபிஎஸ் என்பதே சந்தேகம். தனியாக பாஜக போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூடவெல்ல முடியாது. தமிழகத்தில் நடக்கும் திடாவிட மாடல் ஆட்சியை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியை போல் பார்க்கிறேன். பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு இன்னும் இத்தனை கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு தர வேண்டும் என்பதை தைரியமாக எடுத்துரைத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இது தான் திராவிடம். இதுபோல் வேறு யாராலும் பேசிட முடியாது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget