மேலும் அறிய

PM Modi at G7 Summit: AI டூ பசுமை சகாப்தம் - ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்..!

PM Modi at G7 Summit: ஜி7அவுட்ரீச் அமர்வில் AIக்கான தேசிய மூலோபாயத்தை உருவாக்குவதில் இந்தியாவின் முன்னோடி நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

PM Modi at G7 Summit: 'பசுமை சகாப்தத்தை' உருவாக்க கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என, ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி:

இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அவுட்ரிச் அமர்வில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். அந்த நிகழ்வில் பங்கேற்ற போது, செயற்கை நுண்ணறிவில் (AI) தேசிய மூலோபாயத்தை வகுப்பதில், இந்தியாவின் முன்னோடியான நடவடிக்கையை அடிக்கோடிட்டு உரையாற்றினார்.  மேலும், மனிதனை மையமாக கொண்ட சிறந்த எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறையையும் வலியுறுத்தினார். பிரபல போர்கோ எக்னாசியா ரிசார்ட்டில் பேசிய பிரதமர், கடந்த ஆண்டு இந்தியா நடத்திய G-20 உச்சிமாநாட்டின் போது வலியுறுத்தப்பட்ட AI இல் சர்வதேச நிர்வாகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் மீண்டும் வெளிப்படுத்தினார்.

இலக்கு 2047 - மோடி:

அமர்வில் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மூலோபாயத்தை உருவாக்கும் முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2047-க்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவது எங்களின் தீர்மானம்.  சமூகத்தின் எந்தப் பிரிவினரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதே எங்கள் அர்ப்பணிப்பு" என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டத்தையும் முன்னிலைப்படுத்தினார்.

மோடி வாழ்த்து:

ஜி7 அவுட்ரிச் அமர்வில் பிரமர் மோடி பேசியது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியின் அபுலியாவில் G7 உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பற்றிய அவுட்ரீச் அமர்வில் உரையாற்றினார். குழுவின் 50 வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் வெற்றிபெற வேண்டுமானால், அது மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையால் ஆதரிக்கப்பட வேண்டும். "அனைவருக்கும் AI” என்ற அடிப்படையிலான இந்தியாவின் AI பணியை குறிப்பிட்டு, இந்த தொழில்நுட்பம் முன்னேற்றத்தையும் அனைவரின் நல்வாழ்வையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

எரிசக்திதுறை நடவடிக்கை - மோடி:

எரிசக்தி தொடர்பாக பேசும்போது, “எரிசக்தி துறையில் எங்கள் அணுகுமுறை நான்கு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. கிடைக்கும் தன்மை, அணுகல், மலிவு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல். 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதில் இந்தியா உறுதியாக உள்ளது. "Plant4Mother" மரம் வளர்ப்பு பரப்புரை உள்ளிட்ட இந்தியாவின் மிஷன் லைஃப் [சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை] இல் உலகளாவிய பங்கேற்பிற்கு அழைப்பு விடுத்து” பிரதமர் மோடி பேசினார்.

பசுமை சகாப்தம் - மோடி: 

பசுமை சகாப்தம் பற்றி பேசுகையில், “2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தின் இலக்கை அடைவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம். வரும் காலத்தை 'பசுமை சகாப்தமாக' மாற்ற நாம் ஒன்றாக முயற்சி செய்ய வேண்டும். உலகளாவிய தெற்கு நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கில் வைப்பதை இந்தியா தனது பொறுப்பாகக் கருதுகிறது. ஆப்பிரிக்க யூனியனை அதன் தலைமையின் கீழ் ஜி-20 இல் நிரந்தர உறுப்பினராக்குவதில் இந்தியாவின் பங்கை நினைத்து பெருமை கொள்கிறோம்” என பிரதமர் மோடி பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தமிழ்நாடே பரபரப்பு..! இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் - கடும் கட்டுப்பாடுகள்
TVK Vijay: தமிழ்நாடே பரபரப்பு..! இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் - கடும் கட்டுப்பாடுகள்
ADMK:
ADMK: "சேந்தாதான் ஜெயிக்க முடியும்" இபிஎஸ்-க்கு தூது விடும் ஓபிஎஸ் - மனம் இறங்குவாரா எடப்பாடியார்?
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
Tamilnadu Roundup: பரந்தூர் பறந்த விஜய்! 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாட்டில் 10 மணி வரை
Tamilnadu Roundup: பரந்தூர் பறந்த விஜய்! 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாட்டில் 10 மணி வரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தமிழ்நாடே பரபரப்பு..! இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் - கடும் கட்டுப்பாடுகள்
TVK Vijay: தமிழ்நாடே பரபரப்பு..! இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் - கடும் கட்டுப்பாடுகள்
ADMK:
ADMK: "சேந்தாதான் ஜெயிக்க முடியும்" இபிஎஸ்-க்கு தூது விடும் ஓபிஎஸ் - மனம் இறங்குவாரா எடப்பாடியார்?
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
Tamilnadu Roundup: பரந்தூர் பறந்த விஜய்! 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாட்டில் 10 மணி வரை
Tamilnadu Roundup: பரந்தூர் பறந்த விஜய்! 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாட்டில் 10 மணி வரை
Donald Trump Inauguration: இன்று அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்..! இந்தியாவிற்கான தாக்கம் என்ன? லாபமா? நஷ்டமா?
Donald Trump Inauguration: இன்று அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்..! இந்தியாவிற்கான தாக்கம் என்ன? லாபமா? நஷ்டமா?
Ajithkumar:
Ajithkumar: "நீ அவரு மாதிரியே இருக்க" அஜித்தை பார்த்த ஆச்சரியப்பட்ட MGR மேக்கப் மேன்!
Neeraj Chopra Marriage: ஒலிம்பிக் நாயகன், சத்தமே இல்லாமல் முடிந்த நீரஜ் சோப்ராவின் திருமணம் - யார் இந்த ஹிமானி?
Neeraj Chopra Marriage: ஒலிம்பிக் நாயகன், சத்தமே இல்லாமல் முடிந்த நீரஜ் சோப்ராவின் திருமணம் - யார் இந்த ஹிமானி?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
Embed widget