மேலும் அறிய

போதைப்பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறி வரும் தமிழகம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கருணாநிதியின் குடும்பத்திற்கு ஊழல் செய்வதை விதவிதமாக கற்றுக் கொடுத்தவர் தற்பொழுது புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி.

தமிழகம் போதைப்பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறி வருவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார்.

 


போதைப்பொருட்கள்  விற்கும் மாநிலமாக மாறி வரும் தமிழகம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 வது ஆண்டு துவக்க விழா  நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.   

அப்போது பேசிய அவர், “எம்ஜிஆர் உருவாக்கிய போது 18 லட்சம் அதிமுக உறுப்பினர்கள், புரட்சித்தலைவி அம்மா வந்தவுடன் ஒரு கோடியே 54 லட்சம் உறுப்பினர்கள், எடப்பாடி யார் வந்தவுடன் 2 கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் அஇஅதிமுக.  இந்திய அளவில் தேசிய கட்சிகளுக்கு இணையாக இருந்து ஒரு கட்சி என்றால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இன்றைக்கு இருக்கும் திமுக அரசு பொய்யைச் சொல்லி 565 வாக்குறுதிகள் சொல்லி தேர்தலின் போது வாக்குறுதி அளித்தனர். அப்பா மகன் மகள் என பொய்களைச் சொல்லி ஒருவர் 75 சதவீதம் மற்றொருவர் 90 சதவீதம் என பொய்யைச் சொல்லி மட்டுமே வாக்குகள் சேகரித்தனர். ஆனால்  5% தேர்தலின் போது சொன்ன நிறைவேற்றினால் போதும் அதைக்கூட நிறைவேற்ற முடியாத விடியா திமுக அரசு

 

போதைப்பொருட்கள்  விற்கும் மாநிலமாக மாறி வரும் தமிழகம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

 

 

மகளிர்க்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என அறிவித்துவிட்டு பாதி பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமை வழங்கப்படும் என அறிவித்துவிட்டு தகுதி உடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்த நிலையில் குடும்பத் தலைவிகள் பாதி பேருக்கு இந்த மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் முதியோர்களுக்கும் விதவைகளுக்கும் தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதிமுக கட்சிக்காரர்கள் என்றால் இல்லை. அதிமுக ஆட்சியில் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் கட்சி பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டது. ஆனால் விடியா திமுக ஆட்சியில் அதுபோன்று முதியோர் உதவி தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் அதிமுக ஆட்சியில் ஒரு பெண் மரணம் அடைந்ததை அரசியல் செய்த திமுகவினர். இந்த ஆண்டு மட்டும் 12 பேர் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டனர். தற்பொழுது அவர்கள் ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்  என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க அரசு தான் இந்த  திமுக அரசு

 



போதைப்பொருட்கள்  விற்கும் மாநிலமாக மாறி வரும் தமிழகம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

 

குட்கா பொருட்களை விற்கக் கூடாது என சட்டம் கொண்டு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தவர் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த திமுகவில் உள்ள கொங்கு மெஸ் மணி என்பவர் வீட்டு அருகில் 14 டன் குட்கா பறிமுதல் செய்து அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்தது. ஆனால் தற்பொழுது இருக்கும்  திமுக ஆட்சியில் கஞ்சா, குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக டிஜிபிஏ சொல்லி உள்ளார். சாராயம் கஞ்சா தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் விற்கப்படுகிறது. தமிழகம் போதைப்பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறி வருகிறது.  கருணாநிதியின் குடும்பத்திற்கு ஊழல் செய்வதை விதவிதமாக கற்றுக் கொடுத்தவர் தற்பொழுது புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி” என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் சின்னையா பேசுகையில்,  “அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் துவங்கி 52 ஆண்டு காலம் கடந்து வீரநடை போட்டு வருகிறது. இந்த கழகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் துவங்கவில்லை என்றால் இந்த தமிழ்நாட்டை கருணாநிதி அவர் மகன், மகள் என நான்காக கூறு போட்டு இருப்பார்கள். கமல்ஹாசன், சீமான், விஜய் ஆகியோர் சினிமாவில் கோடி கோடியாக கொள்ளை அடித்து விட்டு, நடிகை கூட கும்மாளம் அடித்து விட்டு, ரிட்டயர் ஆகும் பொழுது கட்சியை ஆரம்பித்து விடுகின்றனர். எம்ஜிஆர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்காக கட்சியை துவங்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்காகவே இந்த கட்சியை துவங்கி சிறப்பாக செயல்படுத்தினார்” என்று பேசினார்.

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget