மேலும் அறிய

Abpnadu Exclusive : ’சசிகலா தலைமையேற்காவிட்டால் அதிமுக காணாமல் போய்விடும்’ - முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பிரத்தேக பேட்டி

"அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும். டிடிவி தினகரன் வழிகாட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நடத்த வேண்டும்"

கோவை விளாங்குறிச்சி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும். டிடிவி தினகரன் வழிகாட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நடத்த வேண்டும்.  

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. கட்சியினர் சந்தோஷமாக இல்லை. கட்சியினர் கரை வேட்டி கட்டிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீதிக்குள் செல்லும் நிலை இல்லை. இரட்டை தலைமையால் எங்கு சொல்வது எனத் தெரியவில்லை. கட்டுப்பாடு இல்லாமல் கட்சி செல்கிறது. சசிகலா தலைமையேற்றால் கட்சி சரியாகும். இல்லையென்றால் அதிமுக காணாமல் போய்விடும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பப்படி 100 வருடம் அதிமுக இருக்க வேண்டும் என்றால், எல்லோரும் ஒன்று சேர்ந்து இருந்தால் மட்டும் முடியும். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு இரட்டை தலைமை தான் காரணம் என்பது மாற்றுக் கருத்து இல்லை. அதிமுகவினர் மனம் உடைந்து உள்ளனர். ஜா- ஜெ அணிகள் இருக்கும் போது தோற்றது போல, இம்முறையும் அதிமுக தோற்றுள்ளது. இதனை சரிகட்ட சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. யார் சொல்லியும் இதனை நான் சொல்லவில்லை.


Abpnadu Exclusive : ’சசிகலா தலைமையேற்காவிட்டால் அதிமுக காணாமல் போய்விடும்’ - முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பிரத்தேக பேட்டி

தர்மயுத்தம் நடத்திய போது ஒபிஎஸ் பக்கம் செல்ல அன்றைய சூழலே காரணம். பின்னர் தொகுதி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இபிஎஸ் பக்கம் சென்றேன். இருவரும் கட்சியை வெற்றிகரமாக நடத்துவார்கள் என நம்பி ஆதரவு தெரிவித்தேன். ஆனால் மக்கள் இரட்டை தலைமையை ஏற்கவில்லை. ஒபிஎஸ், இபிஎஸ் இருவரையும் குறை சொல்ல முடியாது. அவர்களால் முடிந்ததை செய்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

அதிமுக மீண்டும் இணைவதற்கு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி தடைகல்லாக இருப்பார்களா என்ற கேள்விக்கு, ”அப்படி தடையாக இருக்கக் கூடாது. அப்படி விரும்பினால் அவரவர் பகுதிகளில் தனித்தனியாக கட்சி நடத்திக் கொள்ள வேண்டும். மாற்று கருத்து இருக்கக்கூடாது. ஒன்றிணையவில்லை எனில் இயக்கம் காணாமல் போகும்” என அவர் பதிலளித்தார்.

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2011 முதல் 2021 வரை இரண்டு முறை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக ஆறுக்குட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு ஆதரவு தெரிவித்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி தான். பின்னர் ஒ.பி.எஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget