மேலும் அறிய

“ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டாம்; சசிகலாவை சேர்க்க வேண்டும்” - முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி

"தலைமை பொறுப்பில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். இருவரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றனர்" - ஆறுக்குட்டி

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் குறித்து கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் அதிமுகவினர் வேதனையில் இருக்கின்றனர். தலைமை பொறுப்பில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். இருவரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றனர்.

ஜெயலலிதா இருந்த போது இந்த மாதிரியாக கட்சி இல்லை. ஏன் உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக வெற்றி பெறவில்லை?. இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றோம். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இயக்கத்திற்காக உழைத்த அன்வர் ராஜாவை ஏன் நீக்கினீர்கள்? கட்சிக்காக பேசினால் நீக்கினார்கள். பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கினாலும் நீக்குங்கள்.

சசிகலாவை பற்றி இபிஎஸ் ஏன் மோசமாக பேச வேண்டும்?. உன்னை கையை பிடித்து முதல்வர் என அடையாளம் காட்டியவர் அவர். 4 வருடம் அமைச்சர் ஆபீசுக்கு சென்றால் உரிய மரியாதை இருக்காது வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை. அதிமுக சோதனைகளை கடந்து வந்த கட்சி. இனி இருவரும் ஒன்று சேர்ந்த இயங்க வாய்ப்பில்லை.


“ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டாம்; சசிகலாவை சேர்க்க வேண்டும்” -  முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி

தயவு செய்து அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள். அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன். உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கின்றோம். பல முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கேட்டும் நடத்தாமல் இருந்து விட்டனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது. இரண்டு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

விபத்திலே இருவரும் பதவிக்கு  வந்து விட்டனர். இருவரும் சண்டை போடுவது சரியில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டு எதுவும் செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருக்கும் வார்டுகளை கூட கைப்பற்ற முடியவில்லை. அதிமுக சாதிகட்சியாக போகின்றது. திமுக துரோக கட்சியாக மாறி விட்டது. இயக்கத்தை காணாமல் போக்கி விட்டனர். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் கோஷ்டி இருந்ததில்லை. இருவரும் சுத்தமானவர்கள் இல்லை.

கீழ் இருந்து கட்சியில் மேல் வந்தனவன் நான். கடந்த தேர்தலில் எனக்கு சீட் இல்லை என்றனர். என்னுடன் பேசவில்லை. சீட் கொடுக்காதது கூட வருத்தமில்லை. என்னை அழைத்து கூட முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசவில்லை. நான் ஒதுங்கி விட்டேன்.  சசிகலா வர வேண்டும் என சொல்லவில்லை. யாரையாவது அனைவரும் சேர்த்து எடுங்கள். ஒற்றை தலைமை வரட்டும். இவர்கள் இருவரும் வேண்டாம். சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும்.


“ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டாம்; சசிகலாவை சேர்க்க வேண்டும்” -  முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி

பிரதமர் சொன்னதால் துணை முதலமைச்சர் பதவியேற்றதாக ஓ.பி.எஸ் வெளிப்படையாக பேசி இருக்கக்கூடாது. பா.ஜ.க கட்சியை வளர்த்து கொண்டு விட்டனர். அதிமுக சாதி கட்சியாக இரு பிரிவாக இருந்து வருகிறது. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். இருவரும் சேர்ந்து என்னை நீக்கினால் சந்தோசம். எனக்கு சசிகலா, தினகரனுடன் எந்த தொடர்புமில்லை. இது போன்ற நிலை கட்சிக்கு  வரும் என எதிர்பார்த்தேன். வந்துவிட்டது. அரசியல் வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். வேறு கட்சியில் இருந்தும் அழைத்தார்கள். போகவில்லை. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் தலைவர்களாக என்னால் கடுகளவும் ஏற்க முடியாது. இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது. மாவட்ட தலைவர்கள் தான். அதிமுகவில் இருக்கின்றேன். ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் தலைமையின் கீழ் இல்லை” என அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Embed widget