மேலும் அறிய

“ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டாம்; சசிகலாவை சேர்க்க வேண்டும்” - முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி

"தலைமை பொறுப்பில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். இருவரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றனர்" - ஆறுக்குட்டி

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் குறித்து கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் அதிமுகவினர் வேதனையில் இருக்கின்றனர். தலைமை பொறுப்பில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். இருவரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றனர்.

ஜெயலலிதா இருந்த போது இந்த மாதிரியாக கட்சி இல்லை. ஏன் உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக வெற்றி பெறவில்லை?. இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றோம். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இயக்கத்திற்காக உழைத்த அன்வர் ராஜாவை ஏன் நீக்கினீர்கள்? கட்சிக்காக பேசினால் நீக்கினார்கள். பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கினாலும் நீக்குங்கள்.

சசிகலாவை பற்றி இபிஎஸ் ஏன் மோசமாக பேச வேண்டும்?. உன்னை கையை பிடித்து முதல்வர் என அடையாளம் காட்டியவர் அவர். 4 வருடம் அமைச்சர் ஆபீசுக்கு சென்றால் உரிய மரியாதை இருக்காது வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை. அதிமுக சோதனைகளை கடந்து வந்த கட்சி. இனி இருவரும் ஒன்று சேர்ந்த இயங்க வாய்ப்பில்லை.


“ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டாம்; சசிகலாவை சேர்க்க வேண்டும்” -  முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி

தயவு செய்து அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள். அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன். உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கின்றோம். பல முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கேட்டும் நடத்தாமல் இருந்து விட்டனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது. இரண்டு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

விபத்திலே இருவரும் பதவிக்கு  வந்து விட்டனர். இருவரும் சண்டை போடுவது சரியில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டு எதுவும் செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருக்கும் வார்டுகளை கூட கைப்பற்ற முடியவில்லை. அதிமுக சாதிகட்சியாக போகின்றது. திமுக துரோக கட்சியாக மாறி விட்டது. இயக்கத்தை காணாமல் போக்கி விட்டனர். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் கோஷ்டி இருந்ததில்லை. இருவரும் சுத்தமானவர்கள் இல்லை.

கீழ் இருந்து கட்சியில் மேல் வந்தனவன் நான். கடந்த தேர்தலில் எனக்கு சீட் இல்லை என்றனர். என்னுடன் பேசவில்லை. சீட் கொடுக்காதது கூட வருத்தமில்லை. என்னை அழைத்து கூட முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசவில்லை. நான் ஒதுங்கி விட்டேன்.  சசிகலா வர வேண்டும் என சொல்லவில்லை. யாரையாவது அனைவரும் சேர்த்து எடுங்கள். ஒற்றை தலைமை வரட்டும். இவர்கள் இருவரும் வேண்டாம். சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும்.


“ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டாம்; சசிகலாவை சேர்க்க வேண்டும்” -  முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி

பிரதமர் சொன்னதால் துணை முதலமைச்சர் பதவியேற்றதாக ஓ.பி.எஸ் வெளிப்படையாக பேசி இருக்கக்கூடாது. பா.ஜ.க கட்சியை வளர்த்து கொண்டு விட்டனர். அதிமுக சாதி கட்சியாக இரு பிரிவாக இருந்து வருகிறது. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். இருவரும் சேர்ந்து என்னை நீக்கினால் சந்தோசம். எனக்கு சசிகலா, தினகரனுடன் எந்த தொடர்புமில்லை. இது போன்ற நிலை கட்சிக்கு  வரும் என எதிர்பார்த்தேன். வந்துவிட்டது. அரசியல் வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். வேறு கட்சியில் இருந்தும் அழைத்தார்கள். போகவில்லை. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் தலைவர்களாக என்னால் கடுகளவும் ஏற்க முடியாது. இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது. மாவட்ட தலைவர்கள் தான். அதிமுகவில் இருக்கின்றேன். ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் தலைமையின் கீழ் இல்லை” என அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance
எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
GBU 57 Bomb:
GBU 57 Bomb: "பங்கர் பஸ்டர் பாம்" அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய ஏவுகணை, துளை போட்டு இலக்கை தூக்கும்
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
Embed widget