மேலும் அறிய

PMK President: பாமக தலைவர் யார்? ராமதாஸுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்! அன்புமணிக்கு கிடைத்த வெற்றி

2026 ஆகஸ்ட் வரை அன்புமணி தான் பாமக தலைவர் என ராமதாஸ்-க்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் என ராமதாஸ்-க்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

ராமதாஸ் , அன்புமணி மோதல்:

கடந்த 2023ம் ஆண்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டதில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

காலப்போக்கில் பாமக-வில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால் கட்சிக்குள் 2 அணியாக  செயல்பட்டு வந்தனர். இந்தநிலையில் அன்புமணியிடம் இருந்து தலைவர் பதவியை பறிப்பதாக அறிவித்த ராமதாஸ் அவரை கட்சியில் இருந்தும் நீக்குவதாக தன்னிச்சையாக அறிவித்தார். ஆனால் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு தான் அதிகாரம் இருப்பதாகவும், தலைவராக தொடர்வதாகவும் பதிலடி கொடுத்தார் அன்புமணி. 

கடந்த ஆகஸ்ட் 9 தேதி அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுவில் அன்புமணியே 2026 ஆகஸ்ட் வரை தலைவராக தொடர்வார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதெல்லாம் செல்லுபடியாகாது என ராமதாஸ் தரப்பினர் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், அன்புமணி தலைமையிலான பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதன்மூலம் அன்புமணி தலைவராக தொடர்வது உறுதி செய்யப்பட்டது. மேலும் மாம்பழ சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

பாமக தலைவர் அன்புமணி

இதனை தொடர்ந்து ராமதாஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திற்கு சென்றனர். ராமதாஸ் மட்டும் தான் தலைவர், மாம்பழ சின்னம் ராமதாஸ் தரப்புக்கு தான் சொந்தம் என ஜிகே மணி டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என தேர்தல் ஆணையம் உறுதியாக சொல்லிவிட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.

அதில்,  வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அது தொடர்பான தரவுகள் எங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கட்சித் தலைவர் பதவி குறித்த தங்களது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக  அன்புமணி தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget