மேலும் அறிய

Kongu Eswaran: "ஒரு கட்சியில் யார் தலைவராக வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ய முடியாது" -கொங்கு ஈஸ்வரன்.

ஒரு அரசியல் கட்சியில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் யார் தலைவராக வரவேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள்தான் வரமுடியும். திமுகவில் தலைவருக்கு பிறகு யாரை முன் நிறுத்த வேண்டும் என்பது அந்தக் கட்சியின் முடிவு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகளுக்கான எடப்பாடி அருகே உள்ள நெடுங்குளம் காவிரி கரையோர பகுதிகளில் தனி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மத்திய மாநில அரசின் நிதி உதவியின் மூலம் சுமார் 855 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் திட்டம் 2052 ஆம் ஆண்டில் மக்கள் தொகையை தோராயமாக கணக்கிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் விதமாக எடப்பாடி அருகே நெடுங்குளம் காட்டூர் பகுதியில் நீரேற்று நிலையம் மூலமாக சுத்தம் செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் அங்கிருந்து சுமார் 1258 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைத்து ராசிபுரம் நகராட்சி 8 பேரூராட்சிகள், நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எடப்பாடி அருகே நெடுங்குளம் காவிரி கரையோர பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகளுடன் நேரில் சென்று கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Kongu Eswaran:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், "மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டம் திட்டமிட்டபடி பணிகள் நிறைவு பெறும் தருவாயில் இருப்பதாகவும், இந்த வருட இறுதிக்குள் இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கூறுகையில் திமுகவுடன் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கும். தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான் என்று விஜய் கூறிய கருத்துக்கள் எல்லோரும் அரசியல் செய்கின்றனர், எவ்வாறு விளம்பரப்படுத்திக் கொள்வது என்று யோசிக்கிறார்கள் கொங்குநாடு மக்கள் கட்சியை பொறுத்தவரை எந்த அளவிற்கு வளர்ச்சி கொண்டுவர முடியும் என்பது குறித்து மட்டும் தான் யோசித்து வருகிறோம். 

தமிழக முதலமைச்சரை பொறுத்த வரை யார் என்ன பேசினாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை தாமதம் இன்றி செய்யச் சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில் எங்கள் பகுதி மக்களுக்கான வளர்ச்சி குறித்து என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் வெறும் அரசியல் பேசி நாங்கள் விளம்பரம் தேடுபவர் அல்ல. அதேபோல் முதல்வரும் அப்படியல்ல.

எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியலுக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும் என்று கூறியது குறித்து கேட்டதற்கு, ஒரு அரசியல் கட்சியில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் அந்தக் கட்சியில் யார் தலைவராக வரவேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் தான் வர முடியும். திமுகவில் தலைவருக்கு பிறகு யாரை முன் நிறுத்த வேண்டும் என்பது அந்தக் கட்சி முடிவு எடுக்க வேண்டியது. ஒரு கட்சியில் யார் தலைவராக வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ய முடியாது. 

2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் முதல்வர் தலைமையிலான கூட்டணி தேர்தல் காலத்தில் மகத்தான வெற்றியை பெரும் இன்னும் ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வர் அறிவிப்பார் அதனை முன்னிறுத்தி நாங்கள் களத்தில் நிற்போம்" என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget