மேலும் அறிய

”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என மொத்தம் 117 புதிய மாவட்டங்களை உருவாக்க திமுக தலைமை முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் இந்த சூழலில் கட்சி அமைப்பிலும் அதிரடி மாற்றத்தை செய்ய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தயாராகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராகும் திமுக

வரும் 2026 சட்ட மன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் விதமாகவும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுத்திருப்பது போல, கட்சியிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் கட்சி கட்டமைப்பை மாற்றி அமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்புவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாவட்ட செயலாளர்களுக்கு செக் வைக்கும் வகையில் இந்த கட்டமைப்பு மாற்றம் இருக்கும் என்பதால் திமுக மாவட்ட செயலாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றமா ?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து கட்சியையும் ஆட்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு வரும் நிலையில், பல மாவட்ட செயலாளர்கள் சீனியர்களாகவும், மாவட்டத்தில் தாங்கள் எடுக்கு முடிவையே தலைமை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொனியிலும் செயல்பட்டு வருவதாக புகார்கள் அறிவாலயத்திற்கு வந்துள்ளன. இது குறித்து உதயநிதி ஸ்டாலினின் கவனத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதமே தலைமை நிலைய செயலாளர் கொண்டுச் சென்ற நிலையில், குறு நில மன்னர்போல் செயல்படும் மாவட்ட செயலாளர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளை கட்டுப்படுத்தும் செயலாளர்கள், மற்ற நிர்வாகிகளை மதிக்காமல், தொண்டர்களுக்கு எதுவும் செய்துகொடுக்காத செயலாளர்கள் என புகார்களை வரிச்சைப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மாவட்ட செயலாளர்கள் பொறுப்பிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் உதயநிதி ஸ்டாலினிடம் வைத்துள்ளதாகவும் சொல்லப்படும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக உயர்வு ? 72க்கு பதில் இனி 117?

திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ள நிலையில், அதில் பலர் அமைச்சர்களாவும் உள்ளனர். அதனால், அவர்களது முடிவுகள் தவறாகவே இருந்தாலும் யாரும் எதிர்ப்பு சொல்ல முடியாத நிலை, சில மாவட்டங்களில் நிலவுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு மாவட்ட செயலர் வசம் அதிகப்பட்சம் 6 சட்டமன்ற தொகுதிகள் வரும் நிலையில், நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் எழுந்து வருகின்றன. எனவே அவற்றையெல்லாம் களையும் விதமாகவும் கட்சி கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதிக சட்டமன்ற தொகுதிகளை வைத்துள்ள மாவட்ட செயலாளர்களின் அதிகாரங்களை குறைக்கும் விதமாக ஒரு மாவட்ட செயலாளருக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் என்ற அளவில் மாவட்டங்களில் எண்ணிக்கையையும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  எனவே தற்போது இருக்கும் 72 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட அமைப்பு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என மொத்தம் 117 புதிய மாவட்டங்களை உருவாக்க திமுக தலைமை முடிவு எடுத்திருப்பதாகவும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பொதுச்செயலாளர் துரைமுருகன் அந்த அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான விசாரணை: சத்குரு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான விசாரணை: சத்குரு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
Breaking News LIVE 3rd OCT 2024: ஈஷா மையம்: உச்சநீதிமன்றத்தில் சத்குரு மேல்முறையீடு
Breaking News LIVE 3rd OCT 2024: ஈஷா மையம்: உச்சநீதிமன்றத்தில் சத்குரு மேல்முறையீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Cadre issue : ”மன்னிப்பு கேட்டுட்டு போ” பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை? சுற்றிவளைத்த மக்கள்Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான விசாரணை: சத்குரு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான விசாரணை: சத்குரு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
Breaking News LIVE 3rd OCT 2024: ஈஷா மையம்: உச்சநீதிமன்றத்தில் சத்குரு மேல்முறையீடு
Breaking News LIVE 3rd OCT 2024: ஈஷா மையம்: உச்சநீதிமன்றத்தில் சத்குரு மேல்முறையீடு
Virat Kohli: வந்தாலே ரெக்கார்ட்தான்! சச்சினின் சாதனையில் மீண்டும் இணைந்த விராட் கோலி - இந்த முறை என்ன?
Virat Kohli: வந்தாலே ரெக்கார்ட்தான்! சச்சினின் சாதனையில் மீண்டும் இணைந்த விராட் கோலி - இந்த முறை என்ன?
Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?
Navratri 2024: பிறந்தது நவராத்திரி! எதை உணர்த்துகிறது நவராத்திரி? ஏன் கொண்டாடப்படுகிறது?
” ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை ”, அக்.4 அறிக்கை தாக்கல் செய்வோம்-  காவல்துறை அதிரடி
” ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை ”, அக்.4 அறிக்கை- காவல்துறை அதிரடி
Nagarjuna : என் குடும்பத்தைப் பற்றி தப்பா பேசாதீங்க...சமந்தா நாகசைதன்யா பற்றிய அமைச்சரின் சர்ச்சை கருத்திற்கு நாகர்ஜூனா கண்டனம்
Nagarjuna : என் குடும்பத்தைப் பற்றி தப்பா பேசாதீங்க...சமந்தா நாகசைதன்யா பற்றிய அமைச்சரின் சர்ச்சை கருத்திற்கு நாகர்ஜூனா கண்டனம்
Embed widget