மேலும் அறிய

Jaibhim Chandru | ரீல் சந்துரு தெரியும்.. ரியல் சந்துரு தெரியுமா.. ஜெய்பீமின் இன்ஸ்பிரேஷன் இவர்தான்..

பல்வேறு தரப்பினரின் மிரட்டல்களையும் அதிகாரங்களையும் கடந்து அந்த வழக்கில் ராஜாக்கண்ணுவின் குடும்பம் நீதியைப் பெற வழக்கறிஞர் கே.சந்துருவின் வாதங்கள் முக்கியமானதாக இருந்தன. 

சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் சந்துரு கதாபாத்திரம், நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தை தழுவி உருவாகப்பட்டுள்ளது.1993-ஆம் ஆண்டில் கடலூரின் முதனை கிராமத்தில் நிகழ்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கிற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் மிரட்டல்களையும் அதிகாரங்களையும் கடந்து அந்த வழக்கில் ராஜாக்கண்ணுவின் குடும்பம் நீதியைப் பெற வழக்கறிஞர் கே.சந்துருவின் வாதங்கள் முக்கியமானதாக இருந்தன. 

வழக்கறிஞர் To நீதிபதி

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் சந்துரு. அதற்கு முன்பாக 30 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். அப்போது பல பொது நல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்கள் உரிமை வழக்குகள் ஆகியவற்றில் வாதாடினார். அதேபோல சமூக, தொழிற்சங்க பிரச்னைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தார். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு ஒருபோதும் கட்டணம் பெற்றதில்லை. 

பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றிய பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 2001, 2004ம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டும், 2006ம் ஆண்டு தான், சந்துரு நியமிக்கப்பட்டார். இது குறித்து அவர் பேசும்போது இருமுறை நீதிபதிக்காக விண்ணப்பித்தேன். ‘இவர் தீவிரவாதிகளுக்கான வக்கீல்’ என்று சொல்லி அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனக்கு போஸ்டிங் போட மறுத்துவிட்டார் என தெரிவிக்கிறார். இதனையடுத்து 2006ல் ‘வழக்கறிஞர் என்பது தொழில். யாருக்காகவும் யாரும் வாதாடலாம். இதை காரணம் காட்டி நீதிபதி பொறுப்பை கொடுக்காமல் இருக்க முடியாது’என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடன் அவர் முதலில் செய்த காரியம், தன் சொத்து விவரங்களை தலைமை நீதிபதி எச்.என்.கோகலேவிடம் ஒரு சீலிட்ட கவரில் சமர்ப்பித்ததுதான். 


Jaibhim Chandru | ரீல் சந்துரு தெரியும்.. ரியல் சந்துரு தெரியுமா.. ஜெய்பீமின் இன்ஸ்பிரேஷன் இவர்தான்..

 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு 

அவர் நீதிபதியாக பணிபுரிந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். அப்படியெனில் ஒரு நாளைக்கு 75 வழக்குகள். சராசரியாக மாதத்துக்கு 1500 தீர்ப்புகள். இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு எந்த நீதிபதியும் தீர்ப்பு வழங்கியதில்லை. இவ்வளவு வழக்குகளுக்கு தீர்ப்பு எனில் அதற்கு தேவைப்படும் உழைப்பு மிகப்பெரியது. இது குறித்து ஆந்திராவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், ‘இந்திய நீதிமன்றங்களின் சச்சின் சந்துருதான்... அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை’ என எழுதியுள்ளார். 

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள்

உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாயங்களையும், ஆடம்பர மரபுகளையும் உடைத்தெறிந்தவர் சந்துரு. தான் நீதிமன்றத்தினுள் நுழையும்போதும் வெளியில் செல்லும்போதும் தனக்கு பணிவிடை செய்வதற்காக வந்த ஊழியரை, அது ஆடம்பரம் என சொல்லி நிறுத்திவிட்டார். தனது பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல, ஒரு கான்ஸ்டபிள் கூட வேண்டாம் என மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் தன்னை மை லார்ட்’என அழைக்கக்கூடாது என வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார்.  ஒருமுறை வழக்கறிஞர் ஒருவர் தன்னை நீதியரசர் என்ற அழைத்த போது, அந்த வார்த்தை தனிநபர் துதி, அதைப் பயன்படுத்தாதீர்கள் என்றார். "நீதிபதி, நீதியரசர்' என்கிற வார்த்தைகளை விட நீதி நாயகம் என அழைக்கப்படுவதைத்தான் விரும்பினார்.  இவர் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் மேடை நாடங்களுக்கு, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற தேவையில்லை, பஞ்சமி நிலங்களை, வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு எந்த தடையும் இல்லை, மாட்டிறைச்சிக் கடைகள் நடத்த தடை இருந்ததை நீக்கிய தீர்ப்பு ஆகியவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. 


Jaibhim Chandru | ரீல் சந்துரு தெரியும்.. ரியல் சந்துரு தெரியுமா.. ஜெய்பீமின் இன்ஸ்பிரேஷன் இவர்தான்..

சொகுசு கார் வேண்டாம்...மின்சார ரயில் போதும்

இவர் ஓய்வுபெற்றபோது, வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும்போது 5 நட்சத்திர ஓட்டல்களில் நிகழும் பணி ஓய்வு பாராட்டு விழாவை வேண்டாம் என மறுத்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். நாடு விடுதலை அடைந்த பிறகு சென்னை இப்படி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முதல் நீதிபதி சந்துருதான். ஓய்வுக்கு பின்னர் நீதித்துறை சம்பந்தமான பொறுப்புக்களை பெற மாட்டேன் என மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக சமுதாயப் பணி செய்வதையே விரும்புவதாகத் தெரிவித்தார். பணி ஓய்வு பெறும்போதும் தன் சொத்து கணக்கு விவரங்களை அறிக்கையாக அளித்தார். அப்போது, பதவி ஏற்கும்போது என் குடும்ப சொத்து விவரங்களை கொடுத்தேன். இப்போது என்னுடைய சொத்து விவரங்களை கொடுக்கிறேன். புதிதாக சொத்து வாங்கியதற்கான வருமான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன்” என்றார். பணி ஓய்வு பெறும் நாளில் தனக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை ஒப்படைத்துவிட்டு தன் நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
மயிலாடுதுறை DSP சுந்தரேசன்: பரபரப்பு குற்றச்சாட்டுகள்! தற்காலிக பணிநீக்கம் பரிந்துரை - அதிர்ச்சியில் காவல்துறை!
மயிலாடுதுறை DSP சுந்தரேசன்: பரபரப்பு குற்றச்சாட்டுகள்! தற்காலிக பணிநீக்கம் பரிந்துரை - அதிர்ச்சியில் காவல்துறை!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Embed widget