![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
AIADMK Issue: அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம் - பதிலடி கொடுத்த ஓபிஎஸ்!
அதிமுக உள்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 18 பேரை நீக்கம் செய்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
![AIADMK Issue: அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம் - பதிலடி கொடுத்த ஓபிஎஸ்! AIADMK Issue O Panneerselvam Removed 22 Members Including Edappadi Palanisamy From AIADMK Party AIADMK Issue: அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம் - பதிலடி கொடுத்த ஓபிஎஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/c2e1b083902b0d460af725eb4bfd61e61657813603_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக உள்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 18 பேரை நீக்கம் செய்து ஈபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மிகுந்த பரபரப்புக்கிடையே, கடந்த 11 ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு இராண்டாவதாக கூடிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டி இருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது.
இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம் சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது. அன்று நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈபிஎஸ் ஓபிஎஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பேட்டியளித்த ஓபிஎஸ் ஈபிஎஸை தான் கட்சியில் இருந்து நீக்குவதாக பேட்டியளித்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான ஓபிஎஸ் மகன்களான தேனி பாராளுமன்ற எம்.பி ரவீந்தரநாத், ஜெய்பிரதீப், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ஓபிஎஸின் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவாளராக இருந்த அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம். பாபு, கோவை செல்வராஜ், வெங்கட்ராமன், கோபாலக்கிருஷ்ணன், எஸ். எ. அசோகன், ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட 18 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி. தங்கமணி, ஜெயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, ஜக்கையன் உள்ளிட்ட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அதிமுகவின் அலுவலத்தின் சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பும் காரசார விவாதம் நடத்திய நிலையில், இறுதியில் பேசிய நீதிபதி பொதுக்குழு அன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரமாக சம்ர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை நாளை ஒத்தி வைத்து இருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)