மேலும் அறிய

செங்கோட்டையனையும் என்னையும் பிரிக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்- இபிஎஸ் கலகல..

EPS - Sengottaiyan: செங்கோட்டையன் குறித்து கேள்விக்கு, அதிமுகவை யாராலையும் உடைக்க முடியாது; முடக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்றும் , உங்களுடுனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

”ஏன் செங்கோட்டையன் சந்திக்கவில்லை”

அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “ ஏங்க, எங்களை பிரித்து பார்ப்பதிலையே குறியாக இருக்கிறீங்க, நல்லா, உசாரா கேள்வி கேக்குறீங்க, எப்ப பார்த்தாலும், குழப்பம் வரனும்னு இருக்கிறீங்களே தவிர, ஒற்றுமையாக இருக்கனும்னு நினைங்க, நாங்க ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், எங்களை யாராலையும் பிரிக்க முடியாது , எப்போ நான் முதலமைச்சர் ஆகினேனோ, அப்போது இருந்து, இந்த திட்டத்தை போட்டுக் கொண்டுதான் இருக்காங்க, ஆனால் அதையெல்லாம் உடைச்சிக்கிட்டுதான் இருக்கோம். அதிமுகவை யாராலையும் உடைக்க முடியாது; முடக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்; மூக்குடைந்து போகும் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விளக்கமளித்தார். 


செங்கோட்டையனையும் என்னையும் பிரிக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்- இபிஎஸ் கலகல..

இபிஎஸ் - செங்கோட்டையன் சர்ச்சை:

அதிமுகவின் மூத்த நிர்வாகியும் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையனுக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ள மோதல் வெட்ட வெளிச்சமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  சில தினங்களுக்கு முன்பு, போஸ்டரில் அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த செங்கோட்டையன், தொடர்ந்து பல சலசலப்புகளை ஏற்படுத்தி வந்தார். அதிமுக கட்சிக்குள்ளேயே தனது ஆதரவாளர்களை திரட்டி ஈபிஎஸ்க்கு எதிராக அணி சேர்ப்பதாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்படி இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன் மேடையிலேயெ பெயர் குறிப்பிடாமல் பேசி ஈபிஎஸ் மீதான அதிருப்திகளை கடுமையாக வெளிப்படுத்தினார்.

Also Read: செங்கோட்டையன் விளக்கம்...சபாநாயகரை சந்தித்தது ஏன்?

வெடிக்கும் அதிமுக உட்கட்சி பிரச்னை

இவ்வளவு நாள் இலைமறைக்காயாக இருந்த பிரச்சனை இந்த மேடையில் வெட்டவெளிச்சமானது. இதனையடுத்து வைகைச்செல்வன் உள்ளிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் செங்கோட்டையனுக்கு எதிராகவும் ஓபிஎஸ் சசிகலா என இபிஎஸ் எதிர்ப்பாளர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் பேசி அதிமுகவே இரண்டாக போகும் அளவிற்கு இந்த பிரச்சனையை தூண்டிவிட்டனர். இப்படியான நிலையில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 

அதிமுகவுக்கு ஆதராவாக வாக்களித்த செங்கோட்டையன்

அதில் செங்கோட்டையன் அவைத்தலைவர் தனிமையில் சந்தித்தது பேசுபொருளானது. அதற்கு விளக்கமளித்து செங்கோட்டையன் தெளிவுப்படுத்தினார். இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் வாக்கெடுப்பின் போது செங்கோட்டையன் அதிமுகவுக்கு ஆதரவளிப்பாரா இல்லை எடப்பாடி மீதுள்ள கோபத்தை இதில் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில்  சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில்,அதிமுகவுக்கு ஆதரவாக செங்கோட்டையன் வாக்களித்தார். 

அதிமுகவுடன் பிரச்னையே இல்லை

நாம் ஒன்றிணைந்து திமுகவுக்கு எதிராக செயல்பட வேண்டும் நமது பிரச்சனைகளை அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என எடப்பாடி எம் எல் ஏக்கள் சிலரை தூது அனுப்பி செங்கோட்டையனை சமாதானப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தனது கட்சிக்கு விஸ்வாசமாக செயல்பட்டுள்ளார் செங்கோட்டையன். எனினும் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.  இதில் ஓபிஎஸ்_ம் அதிமுகவுக்கு ஆதராவாக் வாக்களித்திருக்கிறார். 

இந்நிலையில், இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத்தான் செங்கோட்டையன் நிலைப்பாடு இருப்பதாகவும், அவர் எப்போதும் அதிமுகவின் விசுவாசிதான் என்றும் கருத்துகள் எழுவதை பார்க்க முடிகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget