மேலும் அறிய

‛சசிகலாவின் கல்வெட்டு பேச்சு...’ -போட்டு உடைக்கும் கேபி முனுசாமி!

‛சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் நினைக்கவில்லை ஊடகங்கள்தான் நினைக்கிறது’ -கேபி முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விருப்பமான வினியோகம் இன்று துவங்கியது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி விருப்பமனு வினியோகத்தை துவக்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி  சசிகலா அதிமுகவில் இணைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த முனுசாமி,  அதிமுக தலைவர்கள் நிர்வாகிகள் ஒன்றரை கோடி தொண்டர்கள் யாரும் இதைப் பற்றி நினைக்கவில்லை. நினைக்காத ஒரு விஷயத்தை ஊடகங்கள் ஏன் ஞாபகப்படுத்துகிறது, என்றும்  ஊடகங்கள் நாங்கள் நினைக்காதது போல் நீங்கள் மறந்துவிட வேண்டும். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சிறிது காலம் தொலைபேசியில் பேசினார்.  தற்போது கல்வெட்டு மூலமாக பேசி வருகிறார். சசிகலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை, திருமதி சசிகலா உண்மையாக ஜெயலலிதா மீது பற்று பாசம் இருந்தால் இந்த இயக்கத்தை வாழ்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

 


‛சசிகலாவின் கல்வெட்டு பேச்சு...’ -போட்டு உடைக்கும் கேபி முனுசாமி!


அதிமுக ஆட்சியில் மழைநீர் கால்வாய்கள் புனரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெறப்பட்ட நிதி ஊழல் நடந்திருப்பதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, தமிழக முதலமைச்சர் வரலாறு தெரியாமல் பேசுகிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல விருதுகளை பெற்றுத் தந்தது கடந்த கால ஆட்சி இந்தியாவில் முதன்மை மாநிலம் என பல விருதுகள் பெறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக இதுபோல் குற்றம் சாட்ட கூடாது. தன்னால் முடியவில்லை என்று வரும்போது எதிரிகள் மீது குற்றம் சுமத்துவது சராசரி மனிதனின் குணம். ஆனால் முதலமைச்சர் சராசரி மனிதர் அல்ல,  அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள் வழங்கிய அந்த பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இடம் வழங்கியுள்ளனர். அவர் அதனை செய்ய வேண்டும் அதை விடுத்து எங்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு நீங்கள்  எதற்கு. ஒதுங்கி விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியவர் கடந்த ஆட்சியில் 24 மணி நேரத்தில் மழை நீர் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய புயல் நேரங்களில் ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது ஒரே நாளில் கடலூர் சாலை புனரமைக்கப்பட்டது. 

 


‛சசிகலாவின் கல்வெட்டு பேச்சு...’ -போட்டு உடைக்கும் கேபி முனுசாமி!

 

தற்போது இந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இணக்கமான ஒத்துழைப்பு இல்லை, ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகள் தான் தற்போதும் உள்ளனர். ஆனால் ஏன் பணிகள் செயல்படுத்த முடியவில்லை என்றால் வழி நடத்தக்கூடிய திறமை இந்த ஆட்சிக்கு இல்லை என குற்றம் சுமத்தினார். மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. நல்ல சிந்தனை உள்ள தலைவராக எதிர்க் கட்சிகளை மதிக்க கூடிவராக இருந்தால் ஜெயலலிதா அவர்கள் இந்த நாட்டிற்கு பல்வேறு அர்ப்பணிப்பான பணிகளை செய்திருக்கிறார்கள் என கருதி மேல்முறையீடு  செய்வார் என நம்புகிறேன். 

 அதிமுக எனும் இயக்கம் எப்படி கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டது அதேபோல் தற்போது தலைமை ஏற்று இருக்கக்கூடிய ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கடந்த தலைவர்களைப் போல் இவர்களும் வழிநடத்திச் செல்வார்கள் என்று தெரிவித்த முனுசாமி, கே ஏ செங்கோட்டையன் அதிமுக வழிகாட்டு குழு கூட்டத்தை வழிநடத்தி செல்ல வேண்டும் என்கிற கருத்து தொடர்பாக கேள்விக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவர்களது கருத்துக்களை சொல்ல முழு அதிகாரம் உள்ளது அது போல் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget