மேலும் அறிய

‛திமுக பொறுப்பேற்றதிலிருந்து சீர்குலையும் சட்ட ஒழுங்கு’ -சிறுமி இறப்பிற்கு ஓபிஎஸ் கண்டனம்!

‛‛பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் நடப்பது, ஆசிரியர் மாணவரை அடிப்பது, காவல் துறையினர் கல்லூரி மாணவரை துன்புறுத்துவது, ரவுடிகள் காவல்  துறையினரை தாக்குவது என சட்டம் ஒழுங்கை சீர்குலைகிறது’ -ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ அப்படியே...


‛திமுக பொறுப்பேற்றதிலிருந்து சீர்குலையும் சட்ட ஒழுங்கு’ -சிறுமி இறப்பிற்கு ஓபிஎஸ் கண்டனம்!

 

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே ஆங்காங்கே பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் நடப்பது, ஆசிரியர் மாணவரை அடிப்பது, காவல் துறையினர் கல்லூரி மாணவரை துன்புறுத்துவது, ரவுடிகள் காவல்  துறையினரை தாக்குவது என சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பங்கள் நடந்து வருகின்ற நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தீயில் கருகிய நிலையில் 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்திருப்பதாக வந்துள்ள செய்தி ஆழ்ந்த துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

திண்டுக்கல் மாாட்டம், கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழியாளி திரு. சத்யராஜ் எம்பவரின் மூன்று குழந்தைகளும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வருவதாகவும், இவர்களில் இரண்டாவது மகள் செல்வி பிரித்திகா: ஐந்தாம் வகுப்பு படித்து வருவதாகவும், நேற்று காலை மூன்று பேரும் பள்ளிக்குச் சென்றதாகவும்,

காலை 11.00 மணி அளவில் செல்வி பிரித்திகா வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாகவும் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அங்குள்ள மாணவிகள் செல்வி பிரித்திகாவை தேடியதாகவும், அப்போது பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் தீயில் கருகிய நிலையில் ஒரு சிறுமி கிடந்ததாகவும், தீயில் கருகிய நிலையில் அடையாளம் தெரியாததால், பிரித்திகாவின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியிடம் தகவல் தெரிவித்ததாகவும், இதைக் கேட்டுப் பதறிப் போன அவரது சகோதரி அந்த இடத்திற்குச் சென்று பார்த்து, தீயில் கருகி கிடப்பது தனது தங்கை பிரித்திகா தான் என்று உறுதி செய்ததாகவும், இதனையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் பிரியதர்ஷனி தகவல் கொடுத்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதனைக் கேள்விபட்ட சிறுமியின் தந்தை பள்ளி வளாகத்திற்கு வந்து உயிருக்குப் போராடி கொண்டிருந்த தன் மகளை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும்  கூறப்படுகிறது.

பொதுவாக இயற்கை உபாதைகளுக்காக பள்ளியின் வகுப்பறையிலிருந்து மாணவ, மாணவிகள் வெளியே செல்வது வழக்கம். அவ்வாறு வெளியே செல்லும் மாணவ, மாணவியர் உடனே வகுப்பறைக்கு திரும்புகிறார்களா என்பதைக் கண்காணிப்பதும், அவ்வாறு திரும்ப காலதாமதம் ஏற்பட்டால், அதுகுறித்த தகவலை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிப்பதும் அந்த வகுப்பு ஆசிரியரின் கடமை. அதேபோல், வகுப்பறைக்கு வெளியே பள்ளி மைதானம் உட்பட இதர இடங்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், காவலாளிக்கும் உண்டு.

பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள இந்த சம்பவத்தைப் பார்க்கும்போது அந்தச் சிறுமி வகுப்பறையை விட்டு வெளியில் வந்தபிறகு, அந்தப் பள்ளி மைதானத்தில் கருகிய நிலையில் உயிரிழந்து இருக்கிறாள் என்றால், இது ஒரு சில மணித்துளிகளில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் அல்ல.



‛திமுக பொறுப்பேற்றதிலிருந்து சீர்குலையும் சட்ட ஒழுங்கு’ -சிறுமி இறப்பிற்கு ஓபிஎஸ் கண்டனம்!

இதற்கு சில மணி நேரம் ஆகியிருக்கும். ஆப்படியென்றால், வகுப்பறைக்கு வெளியே மாணவ, மாணவியர் மீதான கண்காணிப்பு என்பது நீண்ட நேரமாக இல்லை என்பது தெளிவாகிறது. இதன்மூலம், மாணவ, மாணவியர் மீதான பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பில் அலட்சியப் போக்கு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது. மேலும், அந்தப் பள்ளிக்கு காவலாளி இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்வியும், இருக்கிறார் என்றால் அவர் எங்கு இருந்தார் என்ற கேள்வியும் எழுகிறது. பட்டப் பகலில், பள்ளி மைதானத்தில் ஒரு சிறுமி மர்மான முறையில் தீயில் கருகிக் கிடப்பது நிர்வாகத் திறமையின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு, நிர்வாகத் திறமையின்மை காரணமாக  உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'மரணமடைந்த அந்தச் சிறுமிக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதோடு அவாது பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணத்தை தீர விசாரிக்கவும், இதன் பின்னணியில் யாரேனும் இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget