மேலும் அறிய

Online Rummy: ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39வது பலி: தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39ஆவது நபர் பலியானதாகவும் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும்  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39வது நபர் பலியானதாகவும் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும்  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்திரு தலைமையிலான குழு கடந்த ஜூலை மாதம் 28 ம் தேதி தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார். தொடர்ந்து அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் குறித்தும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றியும் அன்றைய தினமே அமைச்சரவை கூட்டத்தில் துறை வாரியாக விரிவாக விவாதிக்கப்பட்டது. 

ஆன்லைன் சூதாட்டத் தடை

71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ’’ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் அதனை விளையாடுபவர்களின் திறன்கள் எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும் மாறாக அவர்களுடைய திறன்களை குறைக்கும் வேலைகளையே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் செய்கின்றன. விளையாடும் நபர்களை ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குன்றன என்றும் அதோடு அவர்களை கடனாளியாக்கும் திட்டத்துடனே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம் இழப்பு அபாயம் இருப்பதாக கூறி தடை போடப்பட்ட நிலையில், அவை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. ஆனால், இந்த முறை இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல் நலம் மற்றும் மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

மக்களின் நல்வாழ்விற்காக இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் உரிமையும் அதிகாரமும் மாநில அரசுக்கு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தடை செய்தால், நீதிமன்றம் தலையிட முடியாது.

பிரதான நோக்கம் லாபமே

அதேபோல், ஆன்லைன் விளையாட்டுகளால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள நீதியரசர் சந்துரு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பிரதான நோக்கம் லாபமாக இருக்கிறதே தவிர, விளையாடுபவர்களின் திறன்களை மேம்படுத்துவதாக இல்லை. அதனால், இதுபோன்ற விளையாட்டுகள், விளையாட்டுகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு கூட தகுதியற்றவை’’ என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அருண்குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். 

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39ஆவது நபர் பலியானதாகவும் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும்  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

’’திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு  கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39 ஆவது தற்கொலை இதுவாகும்.  ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் காலாவதியான பிறகு  சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது! 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் 73 நாட்களாகியும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் தாமதம் செய்வது நியாயம் அல்ல! ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், குடும்பச் சீரழிவுகளும் தொடர்கதையாகி வருகின்றன. சூழலின் அவசரத் தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திரளும் பொதுமக்கள்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திரளும் பொதுமக்கள்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திரளும் பொதுமக்கள்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திரளும் பொதுமக்கள்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Tamil Nadu Next DGP : ’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி இவரா?’  தயாரான பட்டியல்..!
’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?’ பட்டியல் தயார்..!
Chennai Power Cut: சென்னையில் நாளை (22.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
சென்னையில் நாளை (22.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
Sattamum Needhiyum Review : சரவணன் நடித்து ஓடிடியில் வெளியாகியிருக்கும் சட்டமும் நீதியும்...விமர்சனம் இதோ
Sattamum Needhiyum Review : சரவணன் நடித்து ஓடிடியில் வெளியாகியிருக்கும் சட்டமும் நீதியும்...விமர்சனம் இதோ
VS Achuthanandan Passes Away: கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு; மக்கள் மனதை வென்ற அரசியல் தலைவர்
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு; மக்கள் மனதை வென்ற அரசியல் தலைவர்
Embed widget