மேலும் அறிய

என்ஐஏ வழக்கு: செல்போன், சிம் கார்டு ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு.

திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் பென்டிரைவ் சிம் கார்டு ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. 

என்.ஐ.ஏ வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் சிம் கார்டு உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர்கள் இம்தியாஸ்(29), ரிஸ்வான் அகமது(28), சாஜித் அகமது(30) இவர்கள் வீடுகளில் கடந்த 2019ம் ஆண்டு தீவிராவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்குமோ  என்ற சந்தேகத்தின்பேரில் என்ஐஏ போலீசார் அதிரடியாக புகுந்து சோதனையிட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டனர். அதேபோல் முத்துப்பேட்டை தென்னை மரக்கடை தெருவை சேர்ந்த முகமது மைதீன் மகன் அசாரூதீன் என்பவர் அரபு நாடுகளில் உள்ள அன்சுருல்லா' இயக்கத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 2019ம் அவரின் வீட்டில் சோதனை செய்து கைது செய்தனர். தற்போது அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோவை கார் வெடித்த சம்பவம் எதிரொலியாக ஏற்கனவே குற்ற சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் சோதனை சில தினங்களாக நடந்து வரும் நிலையில் இன்று காலை திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில், முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் நேரடி மேற்பார்வையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர்  மகாலட்சமி, எடையூர் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன், கலப்பால் இன்ஸ்பெக்டர் விஜயா, திருக்களார் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை போலீசார் சுமார் 30க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற உத்தரவை பெற்று மேற்க்கண்ட 4 பேரின் வீடுகளுக்குள் உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 


என்ஐஏ வழக்கு: செல்போன், சிம் கார்டு ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு.

வீடுகளில் சோதனை முடிந்த நிலையில் 4 பேரின் வீடுகளில் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று சைபர் கிரைம் காவல்துறையின் மூலமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு சிம் கார்டு, இரண்டு பென் டிரைவ் மற்றும் மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் பென்டிரைவ் சிம் கார்டு ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று டிஜிபி அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 300 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளானர். மாவட்டம் முழுவதும் 13 சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வெளி மாநில வெளி மாவட்ட நபர்கள் காரணம் இன்றி தங்கி உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி உள்ளனர்.


என்ஐஏ வழக்கு: செல்போன், சிம் கார்டு ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு.

அதேபோன்று நம்பர் பிளேட் இல்லாமல் வரும் வாகனங்கள் மற்றும் வெளி மாநில வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கும் விடுதிகளில் யாரும் வந்து தங்குவதற்கு அனுமதி கேட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் நம்பர் பிளேட் பொருத்தாமல் வாகனங்கள் யாரேனும் இயக்கினால் உடனடியாக அவர்களை மறைத்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். அது மட்டும் இன்றி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Embed widget