மேலும் அறிய

கடுப்பான ஆசிரியர்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி தயாரிக்க குழுவா..?

"100 நாளில் பணி நிரந்தரம் என்றீர்கள்.. 1600 நாட்களாகியும் ஏமாற்றமே மிஞ்சுவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"2021 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், 2026 தேர்தலுக்காகப் புதிய வாக்குறுதிகளைத் தயாரிக்க குழு அமைப்பது கேலிக்கூத்தானது" எனத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில அரசுக்கு எதிராகத் தனது கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, நிலுவையில் உள்ள பணி நிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பத்தாண்டுகாலப் போராட்டமும்.. நீளும் காத்திருப்பும்..

கடந்த 2012-ஆம் ஆண்டு, 14-வது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்பிக்க 16,549 பகுதிநேர ஆசிரியர்களைத் தற்காலிகமாக நியமித்தது. அப்போது அவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டது. தற்காலிகப் பணி என்பதால், அவர்களுக்கு மே மாதச் சம்பளம் மற்றும் அரசுப் பணியாளர்களுக்குரிய இதர சலுகைகள் மறுக்கப்பட்டன.

அப்போதே எதிர்க்கட்சியாக இருந்த திமுக, இவர்களின் நிலையைச் சுட்டிக்காட்டி "பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது.

வாக்குறுதிகளால் கவரப்பட்ட 12,000 குடும்பங்கள்

திமுக தனது 15-வது மற்றும் 16-வது சட்டமன்றத் தேர்தல் அறிக்கைகளில், "பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்ற வாக்குறுதியை மிகத் தெளிவாக வழங்கியது. இந்த வாக்குறுதியை நம்பி, சுமார் 15,000 ஆசிரியர்களின் குடும்பங்கள் திமுகவின் வெற்றிக்குப் பெரும் ஆதரவை வழங்கின. 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, "முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சொன்னதைச் செய்வார்; 100 நாட்களில் எங்களது வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்" என ஆசிரியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 1,688 நாட்களைக் கடந்தும், அந்த வாக்குறுதி காகித அளவிலேயே இருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குழு அமைப்பதற்கு எதிர்ப்பு

இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 "ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் பணி நிரந்தரம் செய்யப்படும் என நம்பினோம். ஆனால் இன்றுவரை ஏமாற்றமே பரிசாகக் கிடைத்துள்ளது. தற்போது 17-வது சட்டமன்றத் தேர்தல் (2026) அறிவிப்பு வெளியாகத் தோராயமாக 50 நாட்களே உள்ள நிலையில், அரசு இன்னும் பழைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் மௌனம் காக்கிறது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதிகளைத் தயாரிக்க திமுக குழு அமைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. 2026 தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால், 2021-இல் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றி விட்டு, அதன் பிறகு அடுத்த வாக்குறுதியைப் பற்றிப் பேச வேண்டும்."

வறுமையின் பிடியில் ஆசிரியர்கள்

தற்போது சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் 12,500 ரூபாய் தொகுப்பூதியம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை. விலைவாசி உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல் ஆகியவற்றால் இந்த ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கைகள்

* காலமுறைச் சம்பளம்: 15 ஆண்டு காலப் பணியைக் கணக்கில் கொண்டு, தற்போதைய மிகக் குறைந்த தொகுப்பூதியத்திலிருந்து விடுவித்து, காலமுறைச் சம்பளம் வழங்க வேண்டும்.

* பணி நிரந்தரம்: 2021 தேர்தல் அறிக்கையில் கூறியபடி, எவ்வித நிபந்தனையுமின்றி அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்களையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

* தேர்தலுக்கு முன் தீர்வு: 2026 தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பே இதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.

அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேர்தல் நெருங்கும் வேளையில், ஆசிரியர்களின் இந்த அறிக்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. "நாங்கள் கேட்பது புதிய சலுகைகளை அல்ல, நீங்கள் கொடுத்த வாக்குறுதியைத்தான்" என ஆசிரியர்கள் சமூக வலைதளங்களிலும், நேரடிப் போராட்டங்கள் வாயிலாகவும் வலியுறுத்தி வருகின்றனர்.

முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, 12,000 குடும்பங்களின் எதிர்காலத்தைக் காக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் தேர்தலில் அரசு இதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூட்டமைப்பின் சார்பில் சி.செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"முதலில் எங்களை நிரந்தரமாக்குங்கள், அப்புறம் TRB தேர்வு நடத்துங்கள்!" - முதல்வர் விஜய்யின் ஒற்றைப் பேனா முனையில் காத்திருக்கும் எதிர்காலம்!
நெருப்புப் பிழம்பாய் வந்த ஈசன், சரணடைந்த அசுரன்! திருவெண்காட்டில் மிரள வைத்த ஆடிப் பூர மகா அபிஷேகம்!
நெருப்புப் பிழம்பாய் வந்த ஈசன், சரணடைந்த அசுரன்! திருவெண்காட்டில் மிரள வைத்த ஆடிப் பூர மகா அபிஷேகம்!
கண்கொள்ளாக் காட்சி! மகிஷ வாகனத்தில் கம்பீரமாக காட்சியளித்த வெற்றி வராகி அம்மன்: பக்தி பரவசத்தில் மயிலாடுதுறை!
கண்கொள்ளாக் காட்சி! மகிஷ வாகனத்தில் கம்பீரமாக காட்சியளித்த வெற்றி வராகி அம்மன்: பக்தி பரவசத்தில் மயிலாடுதுறை!
டிகிரி முடித்தவர்களுக்கு நாகப்பட்டினத்தில் கலெக்டர் ஆபீஸ் வேலை: ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவது எப்படி?
டிகிரி முடித்தவர்களுக்கு நாகப்பட்டினத்தில் கலெக்டர் ஆபீஸ் வேலை: ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவது எப்படி?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
Embed widget