மேலும் அறிய

கடலில் மிதந்த உடல் ; உதவப் போய் கைதான தமிழக மீனவர்கள் - நடந்தது என்ன?

எல்லைத் தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைதான நிலையில், அவர்களிடம் சிக்காமல் ஆறு மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை மீட்கப்படும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அறிவித்து  பூம்புகார் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் மீனவர்கள் கைது

தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களை அடித்து துன்புறுத்துவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இலங்கை கடற்படையின் அட்டூழியம் இன்றளவும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கடலில் மிதந்த உடல் ; உதவப் போய் கைதான தமிழக மீனவர்கள் - நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த  பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த  செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் நான்கு பைபர் படகுகளில் கடந்த 20 -ஆம் தேதி இரவு 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பூம்புகார் துறைமுகத்தில் இருந்து சென்ற இவர்கள் நேற்று காலை கரை திரும்ப வேண்டும். ஆனால் மாலை வரை மீனவர்கள் யாரும் கரைதிரும்பவில்லை. மேலும் மீனவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததாலும் மீனவ கிராமங்களில் அச்சம் ஏற்பட்டது.


கடலில் மிதந்த உடல் ; உதவப் போய் கைதான தமிழக மீனவர்கள் - நடந்தது என்ன?

கைதான மீனவர்கள் 

இந்நிலையில் நேற்று இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர் சம்பவம் குறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 1 விசை படகு மற்றும் 2 பைபர் படகுகளில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம்  பூம்புகார் மீனவ கிராமத்தை சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தை சேர்ந்த 3 மீனவர்கள்  மற்றும் சந்திரபாடி கிராமத்தை சேர்ந்த 13 பேர் ஆகிய 37 மீனவர்களையும் இலங்கை கடற்டை கைது செய்தது தெரியவந்தது. அதனை அடுத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்ப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடலில் மிதந்த உடல் ; உதவப் போய் கைதான தமிழக மீனவர்கள் - நடந்தது என்ன?

தப்பிய 6 மீனவர்கள் 

இந்நிலையில் எஞ்சிய இரண்டு பைபர் படகுகளில் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையில் சிக்காமல் தப்பி இன்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர். தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில்;  இந்திய கடற்பரப்பிலேயே நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கே இலங்கை மீனவரின் உடல் மிதந்துள்ளது. இதுகுறித்து வாக்கி டாக்கியில் தகவல் தெரிவித்தோம். அப்போது எங்களை இலங்கை மீனவர்கள் தொடர்பு கொண்டு அது தங்கள் மீனவரின் உடல் எனவும், ஆகையால் நாங்கள் இன்னும் சற்று நேரத்தில் அங்கு வந்து விடுவோம், அதுவரை உடலை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறினர்.


கடலில் மிதந்த உடல் ; உதவப் போய் கைதான தமிழக மீனவர்கள் - நடந்தது என்ன?

அதன்படி சற்று நேரத்தில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் இறந்த சக மீனவரின் சடத்தை மீட்டனர். அப்போது அவ்வழியே வந்த இலங்கை கடற்படை பூம்புகார் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி 1 விசை படகு மற்றும் 2 பைபர் படகுடன் சக மீனவர்களை கைது செய்தனர். இதனை பார்த்து துரிதமாக படகை திருப்பி அங்கிருந்து இரண்டு படகுகளில் இருந்த தாங்கள் 6 பேர் தப்பித்தோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.


கடலில் மிதந்த உடல் ; உதவப் போய் கைதான தமிழக மீனவர்கள் - நடந்தது என்ன?

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மற்றும் மீனவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளையும், படகையும் பாதுகாப்பாக மீட்டுதர வேண்டும் என கண்ணீர்மல்க மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகை மீட்டுத் தரும் வரை பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக கூறி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 75 விசைப்படகு 500 -க்கும் மேற்பட்ட பைபர் படகுகள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Embed widget