மேலும் அறிய

மயிலாடுதுறை மக்களே! பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான ரூ.25 லட்சம் கடன்! உடனே விண்ணப்பிங்க! TABCEEDCO திட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கும் கடன் உதவியினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEEDCO) மூலம் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்வதற்காகக் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறு வணிகம் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடனுதவித் திட்டங்கள்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TABCEEDCO) கடனுதவித் திட்டங்கள் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் பெறத் தேவையான தகுதிகள்

  • விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

தனிநபர் கடன் திட்டம் விவரங்கள்

சிறு வர்த்தகம்/வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் செய்வோருக்காக இந்தக் கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • அதிகபட்ச கடனுதவி: ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஆண்டு வட்டி விகிதம்: ரூ.1.25 லட்சம் வரை: 7%
  • ரூ.1.25 லட்சம் முதல் ரூ. 15.00 லட்சம் வரை: 8%
  • கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

குழுக் கடன் திட்டம் (சுய உதவிக் குழுக்களுக்காக) விவரங்கள்

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில்/வணிகம் செய்வதற்காகக் குழுக் கடன் வழங்கப்படுகிறது. 

இத்திட்டம் இரு பாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

  • ஒருவருக்கு அதிகபட்ச கடன்: ரூ. 1.25 லட்சம் வரை.
  • குழு ஒன்றுக்கு அதிகபட்ச கடன்: ரூ. 25 லட்சம் வரை.
  • ஆண்டு வட்டி விகிதம்: 7%.
  • கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்.

குழுக் கடனுக்குரிய கூடுதல் தகுதிகள்

  • சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
  • திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) அந்தக் குழு தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கறவை மாடு வாங்குவதற்கான சிறப்பு கடன் திட்டம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, கறவை மாடுகள் வாங்குவதற்கு ஒரு சிறப்பு கடனுதவி திட்டமும் உள்ளது.

  • கடன் தொகை: ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 60,000/- வீதம், 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ. 1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஆண்டு வட்டி விகிதம்: 7%. 
  • கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்கழகத்தின் இணையதள முகவரியான www.tabcedco.tn.gov.in-இலிருந்தும் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (நகல்கள்)

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

 * சாதிச் சான்றிதழ்

 * வருமானச் சான்றிதழ்

 * பிறப்பிடச் சான்றிதழ்

 * குடும்ப அட்டை

 * ஓட்டுநர் உரிமம்

 * ஆதார் அட்டை

 * வங்கி கோரும் பிற ஆவணங்கள்

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்

  • சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
  • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்
  • கூட்டுறவு வங்கிகள்

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் இந்தச் சிறப்பான கடனுதவித் திட்டங்களைப் பயன்படுத்தி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, பொருளாதார ரீதியாக முன்னேறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget