மேலும் அறிய

மயிலாடுதுறை மக்களே! பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான ரூ.25 லட்சம் கடன்! உடனே விண்ணப்பிங்க! TABCEEDCO திட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கும் கடன் உதவியினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEEDCO) மூலம் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்வதற்காகக் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறு வணிகம் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடனுதவித் திட்டங்கள்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TABCEEDCO) கடனுதவித் திட்டங்கள் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் பெறத் தேவையான தகுதிகள்

  • விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

தனிநபர் கடன் திட்டம் விவரங்கள்

சிறு வர்த்தகம்/வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் செய்வோருக்காக இந்தக் கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • அதிகபட்ச கடனுதவி: ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஆண்டு வட்டி விகிதம்: ரூ.1.25 லட்சம் வரை: 7%
  • ரூ.1.25 லட்சம் முதல் ரூ. 15.00 லட்சம் வரை: 8%
  • கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

குழுக் கடன் திட்டம் (சுய உதவிக் குழுக்களுக்காக) விவரங்கள்

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில்/வணிகம் செய்வதற்காகக் குழுக் கடன் வழங்கப்படுகிறது. 

இத்திட்டம் இரு பாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

  • ஒருவருக்கு அதிகபட்ச கடன்: ரூ. 1.25 லட்சம் வரை.
  • குழு ஒன்றுக்கு அதிகபட்ச கடன்: ரூ. 25 லட்சம் வரை.
  • ஆண்டு வட்டி விகிதம்: 7%.
  • கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்.

குழுக் கடனுக்குரிய கூடுதல் தகுதிகள்

  • சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
  • திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) அந்தக் குழு தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கறவை மாடு வாங்குவதற்கான சிறப்பு கடன் திட்டம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, கறவை மாடுகள் வாங்குவதற்கு ஒரு சிறப்பு கடனுதவி திட்டமும் உள்ளது.

  • கடன் தொகை: ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 60,000/- வீதம், 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ. 1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஆண்டு வட்டி விகிதம்: 7%. 
  • கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்கழகத்தின் இணையதள முகவரியான www.tabcedco.tn.gov.in-இலிருந்தும் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (நகல்கள்)

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

 * சாதிச் சான்றிதழ்

 * வருமானச் சான்றிதழ்

 * பிறப்பிடச் சான்றிதழ்

 * குடும்ப அட்டை

 * ஓட்டுநர் உரிமம்

 * ஆதார் அட்டை

 * வங்கி கோரும் பிற ஆவணங்கள்

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்

  • சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
  • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்
  • கூட்டுறவு வங்கிகள்

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் இந்தச் சிறப்பான கடனுதவித் திட்டங்களைப் பயன்படுத்தி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, பொருளாதார ரீதியாக முன்னேறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
"ஒரே கூட்டணி.. ஒரே தொகுதி.. ஆனால் இரண்டு வேட்பாளர்கள்!
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தானும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருந்தார் - வி.ஜி.கே. செந்தில்நாதன்
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தானும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருந்தார் - வி.ஜி.கே. செந்தில்நாதன்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
Iran Attack US Firms: “உயிர காப்பாத்திக்கணும்னா ஓடிடுங்க“, டைம் குறித்த ஈரான்; 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
“உயிர காப்பாத்திக்கணும்னா ஓடிடுங்க“, டைம் குறித்த ஈரான்; 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
Stalin Slams EPS: “சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
“சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
GOLD SILVER RATE Apr.1: ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Trichy KN Nehru Speech: “ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
“ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
Embed widget