மேலும் அறிய

திமுக, அதிமுகவுக்குப் பின்னடைவா? சீர்காழியில் கொத்துக் கொத்தாகத் தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழாவில், திமுக, அதிமுகவிலிருந்து விலகி ஏராளமானோர் மாவட்டச் செயலாளர் கோபிநாத் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏழை எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது.

கல்விக்கு முன்னுரிமை - மாணவர்களுக்குப் பாராட்டு

நிகழ்ச்சியின் தொடக்கமாக, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் நினைவு பரிசுகளும் கல்வி உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கோபிநாத், மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

"இன்றைய மாணவர்களே நாளைய இந்தியாவின் தூண்கள்; கல்வி ஒன்றே ஒரு தலைமுறையின் வாழ்க்கையை உயர்த்தும் பேராயுதம்" எனக் கூறி, மாணவர்கள் மேன்மேலும் உயர்கல்வி கற்றுச் சமூகத்திற்குப் பங்காற்ற வேண்டும் என வாழ்த்தினார்.

மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைப்பு

விழாவின் முக்கிய அம்சமாக, தமிழக எதிர்க்கட்சியான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி (நாதக) உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது தாய் கட்சிகளிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

மாவட்டச் செயலாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த இணைப்பின் போது, புதிய உறுப்பினர்களுக்குக் கட்சியின் பொன்னாடை மற்றும் கொடித் துண்டுகளை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்றுக்கட்சியினரின் இந்த திடீர் விலகலும் தவெகவில் பெருமளவில் இணைந்ததும் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

"60 ஆண்டு கால குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" - மா.செ கோபிநாத் ஆவேசம்

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் கோபிநாத், மாநிலத்தில் ஆட்சி அமைத்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது:  "கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள், சாதாரண மக்களின் நலனையோ, அடிப்படைத் தேவைகளையோ முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. மக்கள் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, தங்களது குடும்ப நலனிலும் சொந்தப் சுயலாபத்திலும் மட்டுமே அக்கறை காட்டி வந்துள்ளனர்.

இன்று இங்கு திரண்டுள்ள இந்தக் கூட்டம் பணத்தாலோ அல்லது ஊழல் பலத்தாலோ கூட்டிய கூட்டமல்ல. இது தமிழக மக்களின் உண்மையான உணர்வாலும், மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் எழுச்சியாலும் உருவான மக்கள் கூட்டம்!  நமது தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான நேர்மையான, ஊழலற்ற ஆட்சியைத் தமிழகத்தில்  தொடர்ந்து தங்களின் பேராதரவை வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு

விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய் மற்றும் நிர்வாகிகள் விழா அமைப்பினரை ஏனைய தலைவர்கள் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் தவெக மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திக், மாவட்ட துணைச் செயலாளர், சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய துணைச் செயலாளர் பிரேம்குமார் உட்படக் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget