மேலும் அறிய

மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?

மயிலாடுதுறையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், தலைமையில் போலீசார் அதிரடி நடை ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற அதிரடி ‘நடை ரோந்து’ (Foot Patrol) பணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வணிக வளாக வீதிகளில் இந்த ரோந்துப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பை உறுதி செய்ய நேரடி ரோந்து

மயிலாடுதுறை மாவட்டத்தின் நகர்ப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித பங்கமும் நேராதவண்ணம் அரணாக விளங்குவதற்கும் மாவட்ட காவல் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) G. ஸ்டாலின் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வீதிகளில் நேரடியாக இறங்கி நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

நகரத்தின் முக்கிய கடைவீதிகள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்திப்புகள் வழியாக இந்த ரோந்துப் படை அணிவகுத்துச் சென்றது. போலீசாரின் இந்தத் திடீர் கள ஆய்வு மற்றும் ரோந்துப் பணி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், பாதுகாப்பான உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் எஸ்.பி., கலந்துரையாடல்

நடை ரோந்தின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின் வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் நேரடியாகக் கலந்துரையாடினார். அப்போது பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு முக்கிய அறிவுரைகளையும், விழிப்புணர்வு அவர் வழங்கினார்.

உடைமைகள் மீது கூடுதல் கவனம்: பேருந்து நிலையங்கள், சந்தைகள் (மார்க்கெட்) மற்றும் திருவிழாக்கள் போன்ற அதிக கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்லும் போது பொதுமக்கள் தங்களுடைய நகைகள், பணம் மற்றும் உடைமைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சந்தேக நபர்கள் குறித்துத் தகவல்: நகர்ப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது நடமாடினாலோ அல்லது அசாதாரணச் சூழ்நிலை தென்பட்டாலோ, பொதுமக்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

CCTV கேமராக்களின் அவசியம்: நகரின் முக்கியக் வணிகப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளிலும் கட்டாயமாகக் கண்காணிப்பு கேமராக்களை (CCTV) பொருத்த வேண்டும். இது குற்றச் செயல்களைத் தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காணவும் பெரிதும் உதவும்.

வாகனங்களை ஒழுங்குபடுத்துதல்: கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம், அவற்றை முறையாக ஒழுங்குபடுத்தி நிறுத்த வணிகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிர வாகன தணிக்கை மற்றும் சாலை விதிமுறைகள்

நடை ரோந்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறையின் முக்கியக் கடைவீதிப் பகுதிகளில் திடீர் வாகன தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தணிக்கையின் போது வாகன ஓட்டிகளுக்குச் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்துக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் (தலைக்கவசம்) மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், நகர்ப் பகுதிகளில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி விபத்துகளற்ற மாவட்டமாக மாற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

தொடரும் ரோந்துப் பணிகள்

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், தெரிவிக்கையில், "பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஒரு நல்லுறவை (Public-Police Relationship) மேம்படுத்துவதே இத்தகைய ரோந்துப் பணிகளின் முக்கிய நோக்கமாகும். மயிலாடுதுறை மாவட்டத்தைக் குற்றமில்லாத மாவட்டமாக மாற்றுவதற்குக் காவல்துறை தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. நகர்ப் பகுதிகளில் மட்டுமன்றி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முக்கியப் பகுதிகளிலும் இதுபோன்ற நடைரோந்துப் பணிகள் வரும் நாட்களிலும் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ளப்படும்" என்று உறுதியளித்தார்.

இந்த அதிரடி நடை ரோந்துப் பணியின் போது, மயிலாடுதுறை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) பாலாஜி, மயிலாடுதுறை உட்கோட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் (Inspectors), சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான காவல் ஆளிநர்கள் உடனிருந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
முதலமைச்சர் கைகளால் விருது பெற ஒரு அரிய வாய்ப்பு: நீங்களும் தகுதியானவரா என்று பாருங்கள்!
முதலமைச்சர் கைகளால் விருது பெற ஒரு அரிய வாய்ப்பு: நீங்களும் தகுதியானவரா என்று பாருங்கள்!
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget