மேலும் அறிய

கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

சீர்காழி அருகே சின்ன நிம்மேலி கிராமத்தில் மயான கொட்டகை  இல்லாததால் மழையில்  இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாத நிலையில் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

சீர்காழி அருகே சின்ன நிம்மேலி கிராமத்தில் மயான கொட்டகை  இல்லாததால் மழையில்  இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாத நிலையில் கிராம மக்கள் தவித்து வரும் மக்கள் தங்கள் சொந்த செலவில் தற்காலி கீற்றுக் கொட்டகை அமைத்து உடலை தகனம் செய்யும் அவலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவி வருகிறது.

மயான கொட்டகை இன்றி அவதியடையும் மக்கள் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழ சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன நிம்மேலி கிராமம் அமைந்துள்ளது. ஏழை எளிய விவசாயி கூலி தொழிலாளிகள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மயான கொட்டகை இல்லாமல் திறந்த வெளியில் உடலை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தகனம்  செய்து வருகின்றனர்.


கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

மழையால் மேலும் இன்னல்

அதுவும் மழை காலங்களில் மழை காரணமாக இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இதுகுறித்து கூறி தங்களுக்கு மயான கொட்டகை அமைத்துதர வேண்டும் என சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அது குறித்து செவி சாய்சாய்க்காத அதிகாரிகள் இதுநாள் வரை அது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.


கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

தற்காலிக கீற்று கொட்டகை

இந்த சூழலில் சின்ன நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான சந்திரகாசு என்பவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மயான கொட்டகை இல்லாததால், தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக கிராம மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வசூல் செய்து அவர்களது சொந்த செலவில் தற்காலி கீற்றுக் கொட்டகை அமைத்து, அதில் உயிரிழந்த சந்திரகாசு உடலை தகனம் செய்துள்ளனர். மேலும் இறந்தவரின் இறுதி சடங்கையும் அதிலே செய்துள்ளனர்.


கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

அரசிற்கு இது ஒரு பொருட்டல்ல

இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து சின்ன நிம்மேலி கிராமத்திற்கு உடனடியாக மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல இன்ப துன்பங்களை அனுபவித்துவிட்டு கடைசியில் அவனின் பூதவுடல் ஆனது உறவினர்கள் நண்பர்கள் மரியாதை செலுத்த அமைதியான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் இறந்த பிறகும் அவர்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய இன்னல்கள் ஏற்பட்டால், இறந்தவரின் உறவினர்களும் நண்பர்களும் எந்த அளவிற்கு மன வேதனை அடைவார்கள் என்பதை அதனை அருகில் இருந்து காண்பவர்களாக உணர முடியும். ஆகையால் இது போன்ற மக்கள் கோரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தாமல், பல்லாயிரம் கோடி திட்டங்களை காட்டிலும், இது போன்ற சிறு மயான கொட்டைகளுக்கு நிதி ஒதுக்கீடு என்பது அரசிற்கு ஒரு பெரும் நிதி சுமை கிடையாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
Rs 1000 Incentive For Rural School Girls: 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
Embed widget