மேலும் அறிய

மயிலாடுதுறையில் 2 கி.மீ., படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் - நீர் வடிய வைக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

தரங்கம்பாடி அருகே 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையால் வயல்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் பயிர்கள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது . அதேபோன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை அங்கங்கே பெய்துள்ளது. குறிப்பாகக் கடந்த டிசம்பர் மாதம் மிகத் தீவிர கனமழை தமிழ்நாட்டிற்குக் கிடைத்தது. முதல் வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதேபோல டிசம்பர் மாதத்தில் பின்னாட்களில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் மோசமாக இருந்தது.


மயிலாடுதுறையில் 2 கி.மீ., படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் - நீர் வடிய வைக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரியளவில் மழை எங்கும் இல்லாத ஒரு சூழலே இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட வடக்கு டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மழை இன்னுமே கூட தொடரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை சராசரியாக 13 சென்டிமீட்டர் மழை பதிவானது பதிவாகியுள்ளது. நிலையில் மாவட்டத்தில் அதிகபட்ச சீர்காழியில் அதிகபட்சமாக 24 செ.மீ மழையும், கொள்ளிடத்தில் 18 செ.மீ மழையும், மயிலாடுதுறை 10 செ.மீ , மணல்மேடு 11 செ.மீ, தரங்கம்பாடி 8 செ.மீ குறைந்த பட்சமாக செம்பனார்கோயிலில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 


மயிலாடுதுறையில் 2 கி.மீ., படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் - நீர் வடிய வைக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

இந்நிலையில் நீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் பொக்லைன் வாகனம் மூலம் தூர்ந்து போயுள்ள மழை நீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவுபடி சரி செய்யப்பட்டு தண்ணீர் வடியவைக்கப்பட்டு வருகிறது. இந்த கனமழையால் மயிலாடுதுறை தாலுக்காவில் மாப்படுகை, அருண்மொழித்தேவன், மணலூர், செருதியூர், முளைப்பாக்கம், மேல மருதாந்தநல்லூர், கீழ மருந்த நல்லூர், வேப்பங்குளம், சேத்தூர் அகர கீரங்குடி நல்லத்துக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளும், தரங்கம்பாடி தாலுக்கா காளியப்பநல்லூர், அனந்தமங்கலம், ஒழுகைமங்கலம், எருக்கட்டாஞ்சேரி, கீழ் மாத்தூர். சீர்காழி தாலுக்காவில் சீர்காழி , வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், கொள்ளிடம், ஆச்சாள்புரம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாரான பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை விவசாயிகள் வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


மயிலாடுதுறையில் 2 கி.மீ., படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் - நீர் வடிய வைக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

இந்த மழை தொடர்ந்து நீடித்தால் பயிர்கள் அழுகுவது, முளைப்பது போன்ற செயல்களால் பெரும் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார். ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வரை செலவு செய்தும் தற்போது பெய்த மழையில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினர் வாய்க்கால்களை முறையாக தூர்வாராமல், A, B வாய்க்கால்களை மட்டுமே பெயரளவில் தூர்வாரிவிட்டு C மற்றும் D வாய்க்கால் தூர்வாரப்படாததே மழைநீர் தேங்க காரணம் என்று, தற்போது போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வாரினால் மட்டுமே இந்த தண்ணீரை வடிய வைத்து பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 


மயிலாடுதுறையில் 2 கி.மீ., படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் - நீர் வடிய வைக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

இதனிடையே தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர், மேலையூர், கருவாழக்கரை, மேலப்பாதி, கஞ்சாநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நெற்பயிர்கள் இன்னும் ஒரு சில தினங்களில் அறுவடை செய்யப்பட இருக்கும் நிலையில் தற்போது பெய்த கன மழையினால் நெல்மணிகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. குறிப்பாக கீழையூர் ஊராட்சியில் தண்ணீர் வயல்களில் முழுவதுமாக சூழ்ந்து இருப்பதால் பயிர்கள் மூழ்கியும் , சாய்ந்தும் உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அருகே உள்ள அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வாராதது தான் வயல்களில் தண்ணீர் நிற்பதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மயிலாடுதுறையில் 2 கி.மீ., படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் - நீர் வடிய வைக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகளால் படர்ந்துள்ளதால், தண்ணீர் எந்த வகையிலும் வயல்வெளியில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்கள் தொடர்ந்து தண்ணீரில் இருக்கும் பட்சத்தில் அழுகக் கூடிய நிலை இருப்பதால் உடனடியாக அதிகாரிகள் ஆகாயத்தாமரையை அகற்றி தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும், மேலும் இந்த மழை பாதிப்புகளை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Stalin Vs EPS: டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Vs EPS: டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget