மயிலாடுதுறை: இன்று பவர் கட்! உங்க ஏரியா இருக்கா? மின் தடை பகுதிகள் & விபரம் இதோ!
Mayiladuthurai Power Shutdown 27.11.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (27.11.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
பாலையூர், மேக்கிரிமங்கலம், குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாலையூர், மேக்கிரிமங்கலம், குத்தாலம் மற்றும் கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் 27.11.2025 இன்றைய தினம் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் (குத்தாலம் ) அருள்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
குத்தாலம் துணை மின் நிலையம்
* அரையபுரம்
கடலங்குடிதுணை மின் நிலையம்
* வாணாதிராஜபுரம்
* முருகமங்கலம்
* மாங்குடி
மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையம்
* பேராவூர்
பாலையூர் துணை மின்நிலையம்
* கோமல்
* கந்தமங்கலம்
* மாந்தை
* நக்கம்பாடி
* திருமங்கலம்
* ஸ்ரீகண்டபுரம்
ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஓர் அறிவுறுத்தல்
பொதுவாக, பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 3 மணிக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும். எனினும், மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து இந்த மின் நிறுத்தம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஆகவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த தற்காலிக மின்தடையால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது






















