Mayiladuthurai Power Shutdown (30.08.2025): மயிலாடுதுறை மின் தடை: இன்று உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது...உடனே செக் பண்ணுங்க!
Mayiladuthurai Power Shutdown 30.08.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (ஆகஸ்ட் 30, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இது, மின் விநியோகத்தை சீராகவும் தடையின்றியும் வழங்குவதற்கு மிகவும் அவசியமாகிறது.
பெரம்பூர் துணை மின்நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் துணை மின் நிலையத்தில் இன்றைய தினம் 30.08.2025 சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட உதவி செயற்பொறியாளர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;
இன்று 30.08.2025 சனிக்கிழமை பெரம்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேற்கண்ட மின்பாதைகளில் இருந்து மின் வினியோகம் பெறும் ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
- பெரம்பூர்
- கடக்கம்
- கிளியனூர்
- சேத்தூர்
- முத்தூர்
- எடக்குடி
- பாலூர்
- கொடைவிளாகம்
- ஆத்தூர்
- பெருஞ்சேரி
- தத்தங்குடி
- கோவஞ்சேரி
- அரசூர்
ஆகிய ஊர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.





















