மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (04.07.2026):மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணுங்க! 

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் ஜூலை 4-ல் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின்சாரக் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் தடவாளப் பொருட்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட மணக்குடி, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய முக்கிய துணை மின் நிலையங்களில் வரும் 04.07.2026 (சனிக்கிழமை) அன்று அவசர கால மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கியப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் அது குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு;

1.மணக்குடி துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்

மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் பொறிஞர் M. விஜயபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 33/11 கி.வோ மணக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, மணக்குடி துணை மின் நிலையத்தைச் சேர்ந்த 

* சேமங்கலம்

* வேப்பங்குளம்

* மணக்குடி 

* மாப்படுகை 

* ஆலவேலி

* நத்தம்

* வேப்பங்குளம்

* சாவடி

* உளுத்துக்குப்பை

* மொழையூர்

* ஆனதாண்டவபுரம்

 * கீழிருப்பு 

மேற்கண்ட முக்கியப் பகுதிகள் மட்டுமன்றி, இந்த மின்பாதைகளைச் சார்ந்துள்ள சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் இதே நேரத்தில் மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மின் நிறுத்தம் என்பது அவ்வப்போது ஏற்படும் நிர்வாக ரீதியிலான காரணங்களைப் பொறுத்து தேதி மாற்றி அமைக்கப்படலாம் என்றும் நகர்ப்புற உதவி செயற்பொறியாளர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2. பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்

இதேபோல், பாலையூர் 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் பொறிஞர் N. அருள்செல்வன், வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய இரு துணை மின் நிலையங்களிலும் வரும் சனிக்கிழமை (04.07.2026) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒருசேர மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பின்வரும் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

* பாலையூர்

* பருத்திக்குடி

* காரனூர்

* நக்கம்பாடி

* மாந்தை

* கங்காதாரபுரம்

* தேரழந்தூர் 

* கோமல் 

* கள்ளிக்காடு

* பெரட்டக்குடி 

* கந்தமங்கலம்

* வடமட்டம்

* காஞ்சிவாய்

* கோனேரிராஜபுரம்

* மேக்கிரிமங்கலம்

* பழையகூடலூர்

* கொக்கூர்

* திருவாலங்காடு 

* திருவாவடுதுறை 

* பேராவூர்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் இந்தத் துணை மின் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட சுற்றியுள்ள அனைத்து சிறிய கிராமங்களுக்கும், விவசாய மின் இணைப்புகளுக்கும் இந்த 8 மணி நேர மின் நிறுத்த அறிவிப்பு பொருந்தும் என மின் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

மின் நுகர்வோர்களுக்கான ஆலோசனைகள்

மயிலாடுதுறை கோட்ட மின் வாரிய அதிகாரிகள் தங்களது செய்திக்குறிப்பில், மின் நிறுத்தக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை, குறிப்பாகக் குடிநீர் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுத் தடையின்றி முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

துணை மின் நிலையங்களில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மிக விரைவாகச் செய்து முடிக்கப்படும் பட்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், அதற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்... மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்...மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
ஸ்மார்ட் போன் வச்சிருக்கீங்களா? அப்போ மயிலாடுதுறை கலெக்டரின் இந்த மெசேஜ் உங்களுக்குத்தான்!
ஸ்மார்ட் போன் வச்சிருக்கீங்களா? அப்போ மயிலாடுதுறை கலெக்டரின் இந்த மெசேஜ் உங்களுக்குத்தான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Embed widget