மேலும் அறிய

இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பூம்புகார் சுற்றுலா மையம் - அமைச்சர் மெய்யநாதன் உறுதி...!

பூம்புகார் சுற்று வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

மேம்படுத்தப்பட்டு வரும் பூம்புகார் சுற்றுலா வளாகம் இன்னும் இரண்டு மாதங்கள் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

பூம்புகார் சுற்றுலா வளாகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் சுற்று வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துக்கொண்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் 23 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூம்புகார் சுற்றுலா வளாகம் மேம்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பூம்புகார் சுற்றுலா மையம் - அமைச்சர் மெய்யநாதன் உறுதி...!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் 

அதனைத் தொடர்ந்து  சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;  தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பூம்புகார் சுற்றுலா தளத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞரால்  1973 -ல் இந்த பூம்புகார் சுற்றுலா வளாகம் திறக்கப்பட்டது. பூம்புகார் சுற்றுலா அலுவலகம் 1975 ஆம் அண்டு திறக்கப்பட்டது. அந்தவகையில் பூம்புகார் சுற்றுலா வளாகத்தை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் இந்த மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பூம்புகார் சுற்றுலா வளாகத்தை 23 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுத்தம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.


இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பூம்புகார் சுற்றுலா மையம் - அமைச்சர் மெய்யநாதன் உறுதி...!

இரண்டு மாத காலத்திற்குள் முடிவடையும் பணிகள்

அந்தவகையில் சுற்றுலா வளாகத்தில் சுற்றுசுவர், வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறைகள், பொருள் வைப்பறை, நுழைவுச்சீட்டு அறை, தகவல் கூடம், பாரம்பரிய விளக்கு வசதி, கலைவேலைப்பாடு, சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் சுற்றுலா வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடும் பணிகள்  துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தி, ஆலம், அரசன், இலுப்பை, புங்கை, மகாகனி, தென்னை மரம் அலமண்டா கிரீப்பர், ஆக்கலிபா கிரிடம், காப்பர் பாட் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படும். இங்குள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இரண்டு மாத காலத்திற்குள் இப்பணிகள் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. மிக விரைவாகவும் இப்பணிகள் நடைபெற்று முடிவடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பூம்புகார் சுற்றுலா மையம் - அமைச்சர் மெய்யநாதன் உறுதி...!

புயல் பாதுகாப்பு மையங்கள்

மேலும் கொள்ளிடம் வட்டாரம் முதலைமேடு திட்டு கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையம் 7 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நாதல்படுகை கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையம் 7 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலும் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதற்கான இடம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று, விரைவில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கப்படும். அப்பகுதி மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான அரசு மேற்கொள்ளும்.


இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பூம்புகார் சுற்றுலா மையம் - அமைச்சர் மெய்யநாதன் உறுதி...!

உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவாலங்காட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்தினருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று காரைமேடு பகுதியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகத்துவாரம் தூர்ந்து போய் உள்ள கடலோர கிராமங்களில் தூர் வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.  

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் கைகளால் விருது பெற ஒரு அரிய வாய்ப்பு: நீங்களும் தகுதியானவரா என்று பாருங்கள்!
முதலமைச்சர் கைகளால் விருது பெற ஒரு அரிய வாய்ப்பு: நீங்களும் தகுதியானவரா என்று பாருங்கள்!
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Chennai Power Cut: சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
Embed widget