மேலும் அறிய

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவியை கடித்து குதறிய வெறிநாய் - சீர்காழி அருகே பயங்கரம்

சீர்காழி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவியை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அல்லிவிளாகம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை தெருநாய் கடத்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி மேற்படிப்பிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மாணவிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெறிநாய் இடம் சிக்கிய மாணவி

அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த 12 -ம் வகுப்பு மாணவி வழக்கம்போல் காலை பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது தெருவில் நடந்து போகும்போது எதிர்பாராத விதமாக தெருநாய் ஒன்று மாணவியை நோக்கி பாய்ந்து அவரை கொடூரமாக கடித்து குதறியுள்ளது. இதனால் மாணவியின் கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து. மேலும் மாணவி அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து நாயை அடித்து விரட்டி மாணவியை காப்பாற்றியுள்ளனர்.

மாணவிக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சிகிச்சை

வெறிநாய் கடித்ததில் மாணவியின் கை, கால் உள்ளிட்ட இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக, அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்து வருகிறார்கள். வெறிநாய் கடித்ததால் தடுப்பூசிகள், அடுத்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது தேர்வு எழுத முடியுமா? மாணவியின் கவலை

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் எழுதவேண்டிய நிலையில், தற்போது நாய்க்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மாணவியின் எதிர்காலத்தை கேள்விக்குறியகாக மாற்றியுள்ளது. காயங்களின் தன்மை, அவரது உடல் நிலை ஆகியவை கருத்தில் கொண்டு, அவர் தொடர்ந்து தேர்வுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலை மாணவியையும், அவரது பெற்றோர்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இது முதல் முறையல்ல! மக்கள் குற்றச்சாட்டு 

இந்த வெறிநாய் தாக்குதல் முதல் முறை நடைபெற்ற நிகழ்வு அல்ல. அல்லிவிளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகமாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திரிந்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் கிடைத்துள்ளதாகவும், பொதுமக்கள் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து, பொதுமக்கள் அச்சத்துடன் இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

தொடரும் நிலை – நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

அல்லிவிளாகம் கிராம மக்கள் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இன்னும் தீர்வாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, அந்த பகுதியில் 50-க்கும் அதிகமான நாய்கள் சுற்றித் திரிகின்றன என்பதால், இதுபோன்ற வெறிநாய் தாக்குதல்கள் தொடர்ந்தே நடக்கும் அபாயம் உள்ளது. நாய்களை பிடித்து கட்டுப்படுத்தவும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த அதிகாரிகளும் இதற்காக முன்வரவில்லை என்பதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருஇந்தளூர் பங்குனி உத்திரப் பெருவிழா: தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்!
தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்: திவ்ய தேசங்களில் ஒன்றான திருஇந்தளூரில் கோலாகலமான திருவிழா ஆரம்பம்!
4448 நோய்களைத் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா... 10 நாட்கள் கோலாகல கொண்டாட்டம்...!
4448 நோய்களைத் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா... 10 நாட்கள் கோலாகல கொண்டாட்டம்...!
மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறப்போவது என்ன? எம்.எல்.ஏ ராஜகுமார் விளக்கம்.
மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறப்போவது என்ன? எம்.எல்.ஏ ராஜகுமார் விளக்கம்.
துபாய் தொழிலாளியிடம் ரூ.13 லட்சத்தை அபேஸ் செய்த புதுக்கோட்டை இளைஞர்: 24 மணிநேரத்தில் தட்டி தூங்கிய மயிலாடுதுறை போலீஸ்...
துபாய் தொழிலாளியிடம் ரூ.13 லட்சத்தை அபேஸ் செய்த புதுக்கோட்டை இளைஞர்: 24 மணிநேரத்தில் தட்டி தூங்கிய மயிலாடுதுறை போலீஸ்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டி! திருமா அதிரடி அறிவிப்பு - எந்தெந்த தொகுதிகளில்?
VCK: விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டி! திருமா அதிரடி அறிவிப்பு - எந்தெந்த தொகுதிகளில்?
Iran War: ஈரான் போர்.. ”பாகிஸ்தானிடம் வாய்ப்பை இழந்த இந்தியா, விஸ்வகுருவே காரணம்” மோடியை கிழித்த காங்.,
Iran War: ஈரான் போர்.. ”பாகிஸ்தானிடம் வாய்ப்பை இழந்த இந்தியா, விஸ்வகுருவே காரணம்” மோடியை கிழித்த காங்.,
ADMK alliance AMMK : அதிமுக கூட்டணியில் அமமுக.! களம் இறங்கவுள்ள தொகுதிகள் என்னென்ன.? உத்தேச பட்டியல் இதோ..
அதிமுக கூட்டணியில் அமமுக.! களம் இறங்கவுள்ள தொகுதிகள் என்னென்ன.? உத்தேச பட்டியல் இதோ..
MK Stalin: மக்களுக்கு அறிவுரையா? - முதல்ல நீங்க கேளுங்க.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
MK Stalin: மக்களுக்கு அறிவுரையா? - முதல்ல நீங்க கேளுங்க.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
TN Roundup: விசிக தொகுதிப்பங்கீடு, குறைந்த தங்கம் விலை, அதிமுக மா.செ., கூட்டம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விசிக தொகுதிப்பங்கீடு, குறைந்த தங்கம் விலை, அதிமுக மா.செ., கூட்டம் - தமிழகத்தில் இதுவரை
Iran USA War: ”எலேய்.. சமாதானம்லே” டீலுக்கு ஓகே, ஈரானுக்கு தூது அனுப்பிய ட்ரம்ப்? சீனுக்குள் வரும் பாகிஸ்தான்?
Iran USA War: ”எலேய்.. சமாதானம்லே” டீலுக்கு ஓகே, ஈரானுக்கு தூது அனுப்பிய ட்ரம்ப்? சீனுக்குள் வரும் பாகிஸ்தான்?
Flight Accident: போர் பதற்றம்..! 125 ராணுவ வீரர்களுடன் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - ஏராளமானோர் பலி
Flight Accident: போர் பதற்றம்..! 125 ராணுவ வீரர்களுடன் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - ஏராளமானோர் பலி
திருஇந்தளூர் பங்குனி உத்திரப் பெருவிழா: தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்!
தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்: திவ்ய தேசங்களில் ஒன்றான திருஇந்தளூரில் கோலாகலமான திருவிழா ஆரம்பம்!
Embed widget