மேலும் அறிய

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவியை கடித்து குதறிய வெறிநாய் - சீர்காழி அருகே பயங்கரம்

சீர்காழி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவியை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அல்லிவிளாகம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை தெருநாய் கடத்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி மேற்படிப்பிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மாணவிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெறிநாய் இடம் சிக்கிய மாணவி

அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த 12 -ம் வகுப்பு மாணவி வழக்கம்போல் காலை பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது தெருவில் நடந்து போகும்போது எதிர்பாராத விதமாக தெருநாய் ஒன்று மாணவியை நோக்கி பாய்ந்து அவரை கொடூரமாக கடித்து குதறியுள்ளது. இதனால் மாணவியின் கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து. மேலும் மாணவி அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து நாயை அடித்து விரட்டி மாணவியை காப்பாற்றியுள்ளனர்.

மாணவிக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சிகிச்சை

வெறிநாய் கடித்ததில் மாணவியின் கை, கால் உள்ளிட்ட இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக, அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்து வருகிறார்கள். வெறிநாய் கடித்ததால் தடுப்பூசிகள், அடுத்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது தேர்வு எழுத முடியுமா? மாணவியின் கவலை

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் எழுதவேண்டிய நிலையில், தற்போது நாய்க்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மாணவியின் எதிர்காலத்தை கேள்விக்குறியகாக மாற்றியுள்ளது. காயங்களின் தன்மை, அவரது உடல் நிலை ஆகியவை கருத்தில் கொண்டு, அவர் தொடர்ந்து தேர்வுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலை மாணவியையும், அவரது பெற்றோர்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இது முதல் முறையல்ல! மக்கள் குற்றச்சாட்டு 

இந்த வெறிநாய் தாக்குதல் முதல் முறை நடைபெற்ற நிகழ்வு அல்ல. அல்லிவிளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகமாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திரிந்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் கிடைத்துள்ளதாகவும், பொதுமக்கள் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து, பொதுமக்கள் அச்சத்துடன் இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

தொடரும் நிலை – நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

அல்லிவிளாகம் கிராம மக்கள் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இன்னும் தீர்வாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, அந்த பகுதியில் 50-க்கும் அதிகமான நாய்கள் சுற்றித் திரிகின்றன என்பதால், இதுபோன்ற வெறிநாய் தாக்குதல்கள் தொடர்ந்தே நடக்கும் அபாயம் உள்ளது. நாய்களை பிடித்து கட்டுப்படுத்தவும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த அதிகாரிகளும் இதற்காக முன்வரவில்லை என்பதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மீனவர்கள் கவனத்திற்கு : உங்கள் உறவினர்கள் ஈரானில் சிக்கியுள்ளார்களா? விவரங்களை உடனே சமர்ப்பியுங்கள்...
மயிலாடுதுறை மீனவர்கள் கவனத்திற்கு : உங்கள் உறவினர்கள் ஈரானில் சிக்கியுள்ளார்களா? விவரங்களை உடனே சமர்ப்பியுங்கள்...
மயிலாடுதுறையில் இத்தனை பேரிடம் துப்பாக்கியா...! என்னங்க சொல்றீங்க..?
மயிலாடுதுறையில் இத்தனை பேரிடம் துப்பாக்கியா...! என்னங்க சொல்றீங்க..?
மயிலாடுதுறை மாவட்டத்தின் தேர்தல் நிலவரம் இதுதான்; ஆட்சியர் சொன்ன அப்டேட்ஸ்..
மயிலாடுதுறை மாவட்டத்தின் தேர்தல் நிலவரம் இதுதான்; ஆட்சியர் சொன்ன அப்டேட்ஸ்..
தப்பியோடிய ஓட்டுநர்! கொழுந்துவிட்டு எரிந்த வைக்கோல் வேன் - மயிலாடுதுறை அருகே வியாபாரிகளுக்கு நேர்ந்த சோகம்...
தப்பியோடிய ஓட்டுநர்! கொழுந்துவிட்டு எரிந்த வைக்கோல் வேன் - மயிலாடுதுறை அருகே வியாபாரிகளுக்கு நேர்ந்த சோகம்...
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்
MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: முதல்வர் பதவி, 90 சீட்.. விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஆஃபர்கள்.. ஆதவ் அர்ஜூனா போட்ட லிஸ்ட்!
TVK Vijay: முதல்வர் பதவி, 90 சீட்.. விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஆஃபர்கள்.. ஆதவ் அர்ஜூனா போட்ட லிஸ்ட்!
TVK VIjay: “சாவு வீட்டிற்கும், கல்யாண வீட்டிற்கும்..” தவெக மேடையை அதிர விட்ட ரஜினி ரசிகர் - ஆடிப்போன ஆதவ்
TVK VIjay: “சாவு வீட்டிற்கும், கல்யாண வீட்டிற்கும்..” தவெக மேடையை அதிர விட்ட ரஜினி ரசிகர் - ஆடிப்போன ஆதவ்
Rajinikanth: ரஜினியை திமுக மிரட்டியது இப்படித்தான்.. புது குண்டை போட்ட ஆதவ் அர்ஜூனா!
Rajinikanth: ரஜினியை திமுக மிரட்டியது இப்படித்தான்.. புது குண்டை போட்ட ஆதவ் அர்ஜூனா!
Iran US war: சண்டைலா நிறுத்த முடியாது.. அமெரிக்கா, இஸ்ரேல் முட்டி போடனும் - ஈரானின் மொஜ்தாபா உறுதி
Iran US war: சண்டைலா நிறுத்த முடியாது.. அமெரிக்கா, இஸ்ரேல் முட்டி போடனும் - ஈரானின் மொஜ்தாபா உறுதி
TVK Vijay: 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டி.. முடிவெடுத்த விஜய்.. கரை சேருமா?
TVK Vijay: 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டி.. முடிவெடுத்த விஜய்.. கரை சேருமா?
Iran Israel War:
Iran Israel War: "ஈரான் போரை ஆதரிக்க முடியாது.." அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனர் ராஜினாமா ! அதிர்ச்சியில் ட்ரம்ப்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையை தவெக தலைவர்கள் குறிவைத்தது ஏன்?
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையை தவெக தலைவர்கள் குறிவைத்தது ஏன்?
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Embed widget