மேலும் அறிய

மீனவரை கடித்து குதறிய முதலை - மயிலாடுதுறையில் பயங்கரம்..!

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரை முதலை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரை முதலை தாக்கியதில், அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த மீனவர் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மீனவர்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 55 வயதான ஜெயராமன். இவர் மயிலாடுதுறை-தரங்கம்பாடி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். ஆறுகளில் விசுறு வலை வீசி மீன்பிடிப்பதன் மூலம் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். ஜெயராமனைப் போன்று, அப்பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


மீனவரை கடித்து குதறிய முதலை - மயிலாடுதுறையில் பயங்கரம்..!

கையை கடித்த முதலை

இந்நிலையில் நேற்று மாலை ஜெயராமன் மட்டும் தனியாகச் சென்று சித்தமல்லி அருகேயுள்ள திம்மாபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். இடுப்பளவு ஆழம் கொண்ட ஆற்றில், அவர் விசுறு வலையை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு முதலை அவரது வலது கையை கடித்தது.

உயிருக்குப் போராடிய மீனவர்

முதலையின் பிடியில் சிக்கிய ஜெயராமன், வலியால் துடித்தார். எனினும், உயிருக்குப் பயந்து போராடி, முதலையிடம் இருந்து தனது கையை விடுவித்துக் கொண்டு, கரைக்குத் தப்பித்து ஓடினார். முதலையின் தாக்குதலால் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.


மீனவரை கடித்து குதறிய முதலை - மயிலாடுதுறையில் பயங்கரம்..!

அதிர்ஷ்டவசமாக, அவர் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், ஜெயராமனை மீட்டு, உடனடியாக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குக் கையில் ஆறுக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகள்

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மணல்மேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் முதலைகளின் நடமாட்டம் உள்ளதா என்பதைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் கூறுகையில், "இந்த ஆற்றில் பொதுவாக முதலைகள் நடமாட்டம் இருப்பது குறித்து மீனவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தும், மீன்பிடிக்கச் செல்லும் சில மீனவர்கள் எச்சரிக்கைகளை மீறி ஆற்றுக்குள் இறங்கி மீன் பிடிக்கின்றனர். இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்" என்று தெரிவித்தனர்.


மீனவரை கடித்து குதறிய முதலை - மயிலாடுதுறையில் பயங்கரம்..!

ஜெயராமனின் உறவினர்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் ஆற்று மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளனர். தற்போது, முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, முதலையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது," என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சம்பவம், அப்பகுதியில் மீன் பிடித்து வாழும் மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்குப் பிறகு, பல மீனவர்கள் தங்கள் உயிரை கருத்தில் கொண்டு மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மீன்வளத்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ஒரு கூட்டுக் குழு அமைத்து, ஆற்றில் முதலைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், மீனவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள், "ஆற்றின் அருகில் உள்ள கிராம மக்களுக்கு, முதலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்று தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர்களுக்கு அரசு உடனடியாக நிதிஉதவி வழங்க வேண்டும்," என்று தெரிவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget