மேலும் அறிய

50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு ஓய்வு அளித்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பக் கோரிய வழக்கு தொடர்பாக எதிர்க்குரல் எழுந்து வருகின்றது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை புகழ்பெற்ற அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் ‘அபயாம்பிகை’ என்ற பெண் யானைக்கு வயது முதிர்வு காரணமாக ஓய்வு அளிக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையில், இந்த யானை மயிலாடுதுறை மக்களின் பிரிக்க முடியாத அங்கம் என்பதால், அதற்கு ஓய்வு அளிக்கத் தேவையில்லை என உள்ளூர் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு அலோக் அஸ்வனி குப்தா என்பவர் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: "மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ‘அபயாம்பிகை’ என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த யானைக்கு 60 வயதை நெருங்கிவிட்டதால், அதற்கு முழுமையான ஓய்வு அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி, வயது முதிர்ந்த இந்த யானையை உடனடியாக அரசுக்குச் சொந்தமான யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் நீடித்த பரபரப்பான வாதங்கள்

இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விரிவான விசாரணைக்கு வந்தது. அப்போது தரப்புகளுக்கு இடையே காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 மனுதாரர் தரப்பு வாதம்

யானைக்கு 60 வயதாகப் போகிறது. இந்தச் சூழலிலும் அதற்கு ஓய்வு அளிக்க மறுப்பது, விலங்குகளைத் துன்புறுத்துவதற்குச் சமம். கோவில் நிர்வாகம் யானையை மிகவும் மோசமான நிலையிலேயே பராமரித்து வருகிறது. தலைமை வனப் பாதுகாவலர் அனுப்பிய நிபுணர் குழு இந்த யானையைப் பரிசோதித்தபோது, அது கான்கிரீட் தரையில் நிற்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், யானை குளிப்பதற்கோ அல்லது நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கோ தேவையான முறையான தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. எனவே, யானையின் நலன் கருதி அதனை மாற்ற வேண்டும்.

அரசுத் தரப்பு விளக்கம்

மனுதாரரின் குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார். கோவில் யானை அபயாம்பிகை மிகவும் நல்ல முறையில், அனைத்து விதிகளையும் பின்பற்றி முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானையின் உடலில் எந்தவிதமான காயங்களோ அல்லது பாதிப்புகளோ இல்லை. ஆரோக்கியமாக உள்ள யானையை மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை என்று வாதிடப்பட்டது.

இடையீட்டு மனுதாரர் வாதம்

இந்த வழக்கில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் இடையீட்டு மனுதாரராக இணைந்து தன் தரப்பை விளக்கினார். அவர் கூறும்போது, "50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சூழலில் வாழ்ந்து பழகிவிட்ட ஒரு யானையை, இந்த முதுமை காலத்தில் திடீரென வேறு இடத்திற்கு மாற்றுவது அதன் மனநிலையைப் பாதிக்கும். அதுமட்டுமின்றி, இடமாற்றம் செய்வது அதன் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் அபாயமும் உள்ளது" என்று எச்சரித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் பொறுமையுடன் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

"ஓய்வு தேவையில்லை; யானை எங்கள் சொத்து" - உள்ளூர் ஆர்வலர் கருத்து

நீதிமன்றத்தில் வழக்கு ஒருபுறம் இருக்க, மயிலாடுதுறை வட்டார மக்களிடையேயும், ஆன்மீகவாதிகளிடையேயும் இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபல யானை ஆர்வலர் சாய்விக்னேஷ் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்:  "மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை என்பது வெறும் விலங்கு அல்ல; அது பல தலைமுறைகளாக மயிலாடுதுறை மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக, எங்கள் ஊரின் அடையாளமாக விளங்கி வருகிறது. வயதைக் காரணம் காட்டி அதற்கு ஓய்வு அளித்து, எங்கோ இருக்கும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. கோவிலிலேயே யானைக்குத் தேவையான அனைத்து உயர்தர பராமரிப்புகளும், மருத்துவ வசதிகளும் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. யானையின் மீதும், அதன் ஆரோக்கியத்தின் மீதும் உள்ளூர் மக்களும், கோவில் நிர்வாகமும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். எனவே, யானையை இங்கிருந்து இடமாற்றம் செய்யக் கூடாது என்பதே ஒட்டுமொத்தப் பொதுமக்களின் விருப்பமாகும்."

எதிர்பார்ப்பில் மயிலாடுதுறை மக்கள்

யானை அபயாம்பிகையின் எதிர்காலம் குறித்தும், அது மயிலாடுதுறையிலேயே தங்குமா அல்லது மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பை ஒட்டுமொத்த ஆன்மீக அன்பர்களும், விலங்கு நல ஆர்வலர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Embed widget