மேலும் அறிய

முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த கே. பாலகிருஷ்ணன் - ஏன் தெரியுமா ?

பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர் பதவியை பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளாக இயற்கை இடற்பாடுகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்காமல் பாரபட்சம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

சிபிஐ(எம்) மாவட்ட அலுவலகம் திறப்பு 

மயிலாடுதுறை நீதிமன்ற சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாவட்டக்குழு கட்டிடம் திறப்புவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று திறந்து வைத்தார். முன்னதாக அலுவலகத்தில் வாயில் பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்த மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.


முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த கே. பாலகிருஷ்ணன் - ஏன் தெரியுமா ?

செய்தியாளர்கள் சந்திப்பு 

அப்போது அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே அதிகமான பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் மக்கள் மனதில் உள்ளது. டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்கும் என்று அறிவிப்புகள் வருகிறது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னையில் பெய்த மழையில் தமிழக முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் களத்திலே இருந்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளை தெரிவிக்கிறது.


முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த கே. பாலகிருஷ்ணன் - ஏன் தெரியுமா ?

பாரபட்சம் காட்டும் மத்திய அரசு  

வருகின்ற தொடர் மழை வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் பாதிக்கப்பட்ட நெல், வாழை கரும்பு போன்ற பயிர்கள் குறித்து முறையான கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு இயற்கை இடர்பாடு பாதிப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய நிதியை வழங்காததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க முடியவில்லை. மத்திய அரசு தனது பாரபட்சத்தை கைவிட்டு மாநில அரசின் சுமையில் தானும் பங்கெடுத்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். 


முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த கே. பாலகிருஷ்ணன் - ஏன் தெரியுமா ?

ஆளுநர் பதவி தேவையற்றது 

ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு விரோதமாக தமிழர் பண்பாடு, கலாச்சாரம், ஆகியவற்றிற்கு எதிராக பேசுவதை தொடர்ந்து வருகிறார். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஆளுநர் தன் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளவில்லை. தமிழகத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று எல்லா கட்சியினரும் கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு ஆளுநரை மாற்றமால் இருக்கிறது. ஆளுநரின் பதவிக்காலம் முடிந்தும் மாற்றுவது குறித்து ஆலோசிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கும் மற்றும் எந்த மாநிலத்திற்கும் ஆளுநர் பதவி என்பது தேவையில்லை. பாஜக அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியை பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துவது கண்டிக்கத்தக்கது. மாநில அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்துவது தான் ஆளுநரின் கடமை என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தீர்ப்பு வழங்கியும், அதற்கு நேர்மறையாக தான் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். இந்த போக்கை இந்தியா முழுவதும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த கே. பாலகிருஷ்ணன் - ஏன் தெரியுமா ?

தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை 

தமிழ்த்தாய் வாழ்த்தை திருத்தி பாடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் என்ற வரி விடப்பட்டது சர்ச்சையான பின்னர்தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறுகிறார்கள். எப்படி அந்த வரி விடப்பட்டது என்பதற்கான விளக்கமும் சொல்லப்படவில்லை. அதை உடனடியாக அப்போதே சரி செய்து இருக்க வேண்டும்.

தமிழ்நாடு வறுமை மாநிலமாக மாறும் 

தமிழகத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற அடிப்படையில் பணியாளர்கள் பணியமர்த்தப்படும் நிலை உள்ளது. பணி பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு சமூக பாதுகாப்பு இல்லை என்றால் தமிழகத்தை வறுமை மாநிலமாக மாற்றிவிடும். எனவே தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஆசிரியர்கள், செவிலியர்கள் மருத்துவர்களை உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். 

கார்ப்பரேட்களுக்கு, மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிற மத்திய பாஜக அரசை எதிர்த்து இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். பாஜக தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு தேர்தல் முடிவுகளை மாற்றி வருகிறது என குற்றச்சாட்டை தெரித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
TVS iQube ST vs Ather Rizta Z; ரேஞ்ச், அம்சங்களில் எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? வாங்க பார்க்கலாம்
TVS iQube ST vs Ather Rizta Z; ரேஞ்ச், அம்சங்களில் எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? வாங்க பார்க்கலாம்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
TVS iQube ST vs Ather Rizta Z; ரேஞ்ச், அம்சங்களில் எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? வாங்க பார்க்கலாம்
TVS iQube ST vs Ather Rizta Z; ரேஞ்ச், அம்சங்களில் எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? வாங்க பார்க்கலாம்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
BSNL Introduced Wi-Fi calling facility: மொபைலில் சிக்னல் இல்லையா.!இனி கவலையே வேண்டாம்- புதிய Wi-Fi வசதியை அறிவித்த BSNL
இனி மொபைலில் சிக்னல் இல்லாமலே பேசலாம்.! கட்டணம் எதுவும் இல்லை- BSNL புதிய Wi-Fi காலிங் வசதி அறிமுகம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Embed widget