மேலும் அறிய

காதலனை தொடர்ந்து காதலியும் உயிரிழப்பு - கருத்து வேறுபாட்டால் நடந்த சோகம்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா நேற்று சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறையில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தீக்காயம் ஏற்பட்ட காதல் ஜோடி

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் 24 வயதான மகன் ஆகாஷ். இவர், பூம்புகார் அருகே உள்ள மேலையூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நாகப்பன் என்பவரின் 20 வயதான மகள் சிந்துஜா.  இவர், மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. 


காதலனை தொடர்ந்து காதலியும் உயிரிழப்பு - கருத்து வேறுபாட்டால் நடந்த சோகம்

காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு 

இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக மாணவி சிந்துஜா சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் நேற்று பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆகாஷ் பழகி வரும் வேறு பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


காதலனை தொடர்ந்து காதலியும் உயிரிழப்பு - கருத்து வேறுபாட்டால் நடந்த சோகம்

காதலன் கண்முன்னே தீக்குளித்த காதலி

அதனை அடுத்து மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்த சொன்ன சிந்துஜா, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தனது கண் முன்பு காதலி தீக்குளித்ததால் அதிர்ச்சி அடைந்த காதலன் ஆகாஷ் பதறித்துடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது ஆகாஷ் மீதும் தீப்பற்றியது. இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்து கீழே சரிந்துள்ளனர். இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


காதலனை தொடர்ந்து காதலியும் உயிரிழப்பு - கருத்து வேறுபாட்டால் நடந்த சோகம்

உயிரிழந்த காதலன்

ஆகாஷ் 60 சதவீத தீ காயங்களும், சிந்துஜா 40 சதவீதம் தீ காயங்களுடன் இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிந்துஜா தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முன்னதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருவரிடமும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


காதலனை தொடர்ந்து காதலியும் உயிரிழப்பு - கருத்து வேறுபாட்டால் நடந்த சோகம்

காதலனை தொடர்ந்து காதலியும் உயிரிழப்பு.

கடந்த 14 -ம் தேதி ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் சிந்துஜா மீது கொலைவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா நேற்று சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதலி எடுத்த விபரீத முடிவால் காதலர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!Thirupachi Benjamin | பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்Modi Odisha Event | ஒலித்த வாழ்த்து பாடல்..அமர்ந்த மோடி!பதறிய அமித்ஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
Speaker: ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்?: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி !
Speaker: ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்?: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி !
350 ஆண்டுகள் வரலாறு! காமநாயக்கன்பட்டி கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்!
350 ஆண்டுகள் வரலாறு! காமநாயக்கன்பட்டி கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்!
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
Roshini Haripriyan: ”ஒரே சங்கடமா போச்சு” நடுரோட்டில் அசிங்கப்பட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி - என்னாச்சு?
Roshini Haripriyan: ”ஒரே சங்கடமா போச்சு” நடுரோட்டில் அசிங்கப்பட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி - என்னாச்சு?
Embed widget