மேலும் அறிய

வானகிரி மீனவர்கள்: இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு! கர்ப்பிணி மனைவியின் கண்ணீர் கோரிக்கை, அரசு நடவடிக்கை என்ன?

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தன் கணவரை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என கர்ப்பிணி மனைவி கண்ணீருடன் மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைத்த நிகழ்வு நிகழ்வு அனைவரையும் கலங்க செய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் உட்பட மொத்தம் 14 தமிழக மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு படகில் ஏற்பட்ட பழுது காரணமாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூபாய் 1 கோடி மதிப்பிலான விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்த சம்பவம் பார்த்தவர்களை கலங்க வைத்துள்ளது. 

வாழ்வாதார தேடி சென்ற மீனவர்கள் 

வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு ஒன்று கடந்த நவம்பர் 3-ஆம் தேதி தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காகப் புறப்பட்டது. இந்தப் படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராஜ்குமார் ஆகிய 12 மீனவர்களும், தரங்கம்பாடியைச் சேர்ந்த கோவிந்த் மற்றும் கடலூரைச் சேர்ந்த பாரதி என மொத்தம் 14 மீனவர்கள் சென்றுள்ளனர். 

பழுதடைந்த படகு 

ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக விசைப்படகில் திடீரெனப் பழுது ஏற்பட்டது. உடனடியாகப் படகைச் சீரமைக்கும் நோக்கில், மீனவர்கள் படகை அருகே உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்திற்கு கொண்டு சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர், மீண்டும் அங்கிருந்து தரங்கம்பாடி திரும்புவதற்கு மீன்வளத் துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை அன்று ஜெகதாம்பட்டினத்தில் இருந்து தரங்கம்பாடி நோக்கி அந்த விசைப்படகு புறப்பட்டுள்ளது.

நடுக்கடலில் வந்து கொண்டிருந்த போது, மீண்டும் படகில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் படகை இயக்க முடியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர். படகின் என்ஜின் பழுதால் படகு காற்றின் போக்கில் மெல்ல மெல்ல இலங்கை கடற்பரப்பை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு பழுதடைந்து, எந்தவிதமான தொலைத்தொடர்புக் கருவிகளும் வேலை செய்யாததால், கடலில் தத்தளித்த மீனவர்களால் தங்களது நிலை குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை

படகு பழுது காரணமாகத் திசைமாறி, இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்றதாகக் கூறி, அந்த 14 தமிழக மீனவர்களையும், சுமார் ரூபாய் 1 கோடி மதிப்பிலான விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தகவல் வானகிரி மீனவக் கிராமத்தை அடைந்ததும், ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மேலே மீனவர்களின் குடும்பங்கள் கண்ணீருடன் கலங்கி தவித்து வருகின்றனர். 

கர்ப்பிணிப் பெண் கண்ணீர் மல்கக் கோரிக்கை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் வானகிரி மீனவ கிராமத்திற்கு நேரில் சென்று, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் மனைவி, தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும், தன் கணவரை உடனடியாக மீட்டுத் தருமாறும் சட்டமன்ற உறுப்பினரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த அனைவரின் மனதையும் உலுக்கியது.

சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், "படகு பழுது காரணமாகத் திசைமாறிச் சென்ற இந்த அப்பாவி மீனவர்களையும், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகையும் மீட்டுத் தருவதற்காக, தமிழக அரசு மூலம் உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதியளித்தார். மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவில் மீட்டுத் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வானகிரி கிராம மக்கள் ஒட்டுமொத்தமாகக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறை: சீட் கிடைக்காதவர்கள் துரோகம் செய்கிறார்கள் - மதன் குற்றச்சாட்டு!
மயிலாடுதுறை: சீட் கிடைக்காதவர்கள் துரோகம் செய்கிறார்கள் - மதன் குற்றச்சாட்டு!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே பரபரப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம் - 2026 தேர்தலைப் புறக்கணிக்க முடிவு!
சீர்காழி அருகே பரபரப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம் - 2026 தேர்தலைப் புறக்கணிக்க முடிவு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Embed widget