மேலும் அறிய

சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

சீர்காழி நகராட்சி பகுதியில் குடியிருப்புகளை கழிவு நீர் சூழ்ந்து நிற்பதை தடுத்து நிறுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்களுடன் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி என இரண்டு நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் சீர்காழி நகராட்சி 24 வார்டுகளை கொண்டது. இதில் திமுகவைச் சேர்ந்த துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் நகரமன்ற தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 5 மற்றும் 6-ஆவது வார்டு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் கழிவு நீர், மழை நீர் வடிகால் மூலம் புகுந்து குடியிருப்பு பகூதியில் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.


சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

நகர்மன்ற கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தல்

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீர் உட்புகுவதை தடுக்க மன்ற உறுப்பினர் பாலமுருகன் 5-ஆவது வார்டு உறுப்பினரின் கணவர் மதியழகன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு கழிவுநீர் பாதையில் மண்ணை கொட்டி அடைத்தனர். இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன், 5 - ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரின் கணவர் மதியழகன் ஆகியோர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

நகராட்சி அலுவலகம் முற்றுகை 

இந்நிலையில், 5, 6-ஆவது வார்டு பகுதியில் குடியிருப்புகளை கழிவு நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும், நகரில் அன்றாடம் குப்பைகளைளை அகற்றி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, சீர்காழி நகராட்சி நகர நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற உறுப் பினர் பாலமுருகன் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமதி இமயவரம்பன், கலைச்செல்வி, ரமாமணி, நாகரத்தினம், ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தங்கள் வார்டு பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு 

இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்த வந்த நகராட்சி ஆணையர் மஞ்சுளாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து சீர்காழி காவல்துறையினர், நகராட்சி ஆணையர் தர்னாவில் ஈடுபட்டவர் களை அழைந்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து இரண்டு நாட்களில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கை விடப்பட்டு கலைந்து சென்றனர். சீர்காழி நகரின் முக்கிய விதியில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பொதுமக்கள் 

சீர்காழி நகராட்சி நிர்வாகம் சீர்கேடு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற போராட்டங்களில் மக்கள் ஈடுபடுவதும், தம்மை நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர முடியாமல் நகர மன்ற உறுப்பினர்களும் போராடுவதும் தொடர்கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
Embed widget