மேலும் அறிய

மயிலாடுதுறை: கழிவுநீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள் - நோய் தொற்று அபாயத்தில் மக்கள்..

மயிலாடுதுறையில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் பலத்த கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கியது.

இந்நிலையில் மழை நீர் தேங்கி ஐந்து நாட்களைக் கடந்துள்ள நிலையில், நகரின் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீருடன் பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் கலந்திருப்பதால், அப்பகுதி மக்கள் தொற்றுநோய் பாதிக்கும் ஆபத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் குடியிருப்புகளின் மக்கள் முடங்கிக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

புயல் மழையால் ஏற்பட்ட இன்னல்

கடந்த நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நகரப் பகுதிகளில் மழைநீர் ஓரளவு வடிந்த நிலையில், புறநகரில் உள்ள தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் நிலைமை படுமோசமாக உள்ளது.

வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோகுலம் நகர், ராசி நகர், கைலாஷ் நகர், கோகுலம் நகர் தெற்கு, மதுரா நகர் தெற்கு, ஜெய் கணேஷ் நகர் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வெள்ளம் போல மழைநீர் சூழ்ந்துள்ளது.

ஐந்து நாட்களாகியும் இந்த நீரை வடிய வைக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கழிவுநீரில் மூழ்கிய வாழ்விடங்கள்

இந்தப் பகுதிகளில் மழைநீர் வடிய முக்கிய வடிகாலாகச் செயல்படுவது சேந்தங்குடி வாய்க்கால். ஆனால், இந்த வாய்க்கால் முறையாகத் தூர்வாரப்படாமல் பல ஆண்டுகளாகச் சீரழிந்து கிடக்கிறது. இதன் காரணமாக, மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளைச் சுற்றியே குளம் போலத் தேங்கியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மிக முக்கியமானதும், மிகப்பெரிய சுகாதாரக் கேட்டை விளைவிக்கக்கூடியதுமான ஒரு நிகழ்வும் அங்கு அரங்கேறியுள்ளது. அதாவது, மயிலாடுதுறை நகராட்சியின் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கழிவுநீர், இந்தச் சேந்தங்குடி வாய்க்காலில் நேரடியாகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கடந்த ஐந்து நாட்களாகத் தேங்கிக் கிடந்த சுத்தமான மழைநீருடன், பாதாள சாக்கடையின் கழிவுநீரும் கலந்ததால், அந்தப் பகுதியே கருமையான நிறத்துடன், தாங்க முடியாத அளவிற்குத் துர்நாற்றம் வீசும் சாக்கடைப் பகுதியாக மாறியுள்ளது. இந்தச் சாக்கடைக் கழிவுநீர் பல வீடுகளின் முற்றம் வரை புகுந்துள்ளது.

வீட்டுக்குள்ளேயே முடங்கிய பொதுமக்கள்

வீடுகளைச் சுற்றிலும் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் வாசல்படி தாண்டி வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், வேலைக்குச் செல்லவும் படகைப் பயன்படுத்த வேண்டிய அல்லது இடுப்பளவு சாக்கடை நீரில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். குறிப்பாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியானது புறநகர்ப் பகுதி என்பதாலும், அதற்கு அருகிலேயே மயிலாடுதுறை நகராட்சியின் குப்பைகள் கொட்டப்படும் கிடங்கு இருப்பதாலும், வாய்க்கால் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் குப்பைகளை வீசிச் செல்வது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. கழிவுநீரும் குப்பைகளும் தேங்கிக் கிடப்பதால், கொசுக்களின் உற்பத்தி மையமாக இந்த இடம் மாறியுள்ளது.

தொற்றுநோய் பரவும் அச்சம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சல்கள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், வடிகாலில் தேங்கிக் கிடக்கும் இந்தக் கழிவு கலந்த நீரால் இப்பகுதி மக்களுக்குப் பெரும் சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பலரும் ஏற்கனவே பலவிதமான தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் மழை சார்ந்த காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீர்த் தேக்கம் நீடித்தால், காலரா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பெரும் அளவில் பரவி, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

"சேந்தங்குடி வாய்க்காலைத் தூர்வாரி, மழைநீரை வடிய வைக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைநீர் தேங்கியுள்ள நிலையில், தொடர்ந்து கழிவுநீரையும் கலந்துவிட்டு எங்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்துவிட்டனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்," என அப்பகுதி மக்கள் கடும் வேதனையும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளதாகவும், அவர்களின் அலட்சியமே இந்தப் நிலமைக்கு காரணம் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல், உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்:

*சேந்தங்குடி வாய்க்காலைப் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

*குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள தேங்கிக் கிடக்கும் மழைநீரைக் கழிவுநீருடன் சேர்த்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

*பாதாள சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் கலக்கப்படுவதைத் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

*சுகாதாரச் சீர்கேட்டைக் கருத்தில் கொண்டு, இந்தப் பகுதிகளில் மருத்துவக் குழுக்களை அனுப்பி சுகாதாரப் பணிகளையும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இல்லையேல், இப்பகுதி மக்கள் அனைவரும் ஒரு பெரும் தொற்றுநோய்ப் பேரிடரைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மக்களின் உயிரைப் பாதுகாக்க விரைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஆடி ஆஷாட நவராத்திரி: காரைமேடு வாராஹி அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!
ஆடி ஆஷாட நவராத்திரி: காரைமேடு வாராஹி அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!
ஒரே முகாமில் பல சலுகைகள்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் சூப்பர் பிளான்!
ஒரே முகாமில் பல சலுகைகள்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் சூப்பர் பிளான்!
ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
Mayiladuthurai Power Shutdown (23.07.2026) : இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு பட்டியல் இதோ..!
Mayiladuthurai Power Shutdown (23.07.2026) : இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு பட்டியல் இதோ..!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget